Wednesday, May 24, 2006

ஒரு சுய-மறு-பரிசீலனை

வலைப்பதிவர் பெயர்: தன. வித்யாசாகரன்

வலைப்பூ பெயர் : தெளிவு, chumma

சுட்டி(url) :
http://vidyasa.blogspot.com
http://vidyasakaran.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: திருநெல்வேலி, பொள்ளாச்சி, பெங்களூர் (சொந்த ஊர், வளர்ந்த ஊர், வசிக்கும் ஊர்)

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் கண்டுகொண்டதுதான். மாலன் அவர்களது கட்டுரையொன்றின் வழி.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 2004 (இதன் முன் rediff-இல் ஒரு வலைப்பூ ஆரம்பித்து, தொடராமல் விட்டு விட்டேன்)

இது எத்தனையாவது பதிவு: அதிகமில்லை, 22

இப்பதிவின் சுட்டி(url): http://vidyasa.blogspot.com/2006/05/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
தமிழ்: சிந்தனையை ஒழுங்காகப் பதிவு செய்து, என் கேள்விகட்கு விடையறிய உதவுமென்ற எண்ணம். இப்போது கிறுக்கல் தளமாகி விட்டது. பரவாயில்லை.
ஆங்கிலம்: என் உணர்வுகளைச் சிலருடன் பகிர்ந்து கொள்ள

சந்தித்த அனுபவங்கள்: அதிகமில்லை.

பெற்ற நண்பர்கள்: மிகக் குறைவு. என் நோக்கமும் அதுவல்ல

கற்றவை: வாசித்தவை நிறைய உண்டு. கற்றவை மிகக் குறைவு. பிறரது எண்ண்ங்களைப் பற்றிய, பல்வேறு புதிய விதயங்களைப் பற்றிய பொதுவான புரிதல் வளர்ந்திருக்கிறது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: பெரிய வித்யாசமில்லை. தாளில் எழுதாமல் தளத்தில் பதிகிறேன். என் சுதந்திரம் என்னிடம், எப்போதும்போல் பத்திரம்.

இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து குழம்பித் தெளிந்து, குழம்பித் தொடர்தல்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என் profile-இல் உள்ளது தவிர வேறொன்றுமில்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: நன்றி! ஒரு சுய பரிசீலனைக்கு உதவியமைக்கு. :-)