Saturday, May 17, 2008

உணர்வுக்கிழம்

முன்னோரின் அலங்காரங்கள்
அருவெறுப்பூட்டுவன
மேலிரண்டு வரிகள் போன்றே!
தன் மனதைத் தைத்து
அதனூடாய்ப் பிறந்தன தவிர்த்து
எதைத்தான் ரசிக்க இயலும்?
சென்ற நொடியிற் பிறந்தன‌
வெட்கமூட்டுவன தவிர்க்கவியலாது.
அறியப்படுமுன் வெறுக்கப்படுதலே
பிறப்பனவற்றின் ஒரே விதி போலும்.
தன்சந்ததி உண்டு வாழும்
என் உணர்வுக்கிழம் எதுவோ, யாரோ?