தமிழக அதிகாரிகள் அவர்களால் கைது செய்யப்பட்ட ஐந்து மனித உரிமைக் காவலர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களுக்கெதிரான பொய் வழக்குகளைக் கைவிட வேண்டும்; அத்துடன் அவர்களைத் துன்புறுத்தி மிரட்டியமைக்கு மாநிலக் காவல்துறையைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்"
- மனித உரிமைக் கழகம் (ஆம்னெஸ்டி இன்டர்னேஷனல்)
மதுரை 'பீப்பிள்ஸ் வாட்ச்' அமைப்பு நடத்திய மனித உரிமைப் பயிற்சியின் பங்கேற்றுள்ள ஐந்து மனித உரிமைக் காவலர்கள் - பாரதி பிள்ளை, நிகர்கா ப்ரியா, சுதா, ஞான திரவியம் மற்றும் ஆனந்தன் - ஆகஸ்ட் 15 இரவில் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப் பட்டனர். சுரேஷ் என்கிற தலித் இளைஞர் ஒரு காவல் அதிகாரியால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் விசாரணை நடத்தப்படாததைக் குறித்து உண்மை அறியும் முயற்சியில் வீரவநல்லூர் சென்றபோது இது நடந்தது. கைதுக்கு முன்பு, அவர்கள் ஆறு மணி நேரம் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டிருந்தனர்.
அவர்கள் இ.பி.கோ 170 (அரசு அலுவலராக ஆள்மாறாட்டம் செய்தல்), 353 (அரசு அலுவரரைப் பணிசெய்யவொட்டாமல் தடுத்தல்), 416 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்), 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு, சிறையிலடக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினர் 'பீப்பிள்ஸ் வாட்ச்'-இன் மதுரை இயக்குனர் ஃகென்றி அவர்களைத் 'தலைமறைவான குற்றவாளி'யாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து மனித உரிமைக் கழகம் (ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்) வெளியிட்ட அறிக்கை
NDTV காணொளி
-------------------------------------------------------------------
அதிகாரம் கண்களற்றது,
தன்னிலும் வலிய அதிகாரத்தின் பாதத்தை நக்க அதற்கு நாக்குண்டு;
அடங்கிக் கிடக்கும் ஏதிலிகளை நசுக்கிச் செல்ல அதற்கு நாறும் கால்களுண்டு;
உரிமைக் குரலெழுப்பும் குரல்வளைகளை முறிக்க அதற்குக் கைகளுண்டு;
அதன் கைகள் கொள்ளாத அளவுக்கு அதிகமான குரல்வளைகள்,
அதுவொன்றே இப்போதைய நம்பிக்கை.
Showing posts with label மனித உரிமைக் கழகம். Show all posts
Showing posts with label மனித உரிமைக் கழகம். Show all posts
Thursday, August 19, 2010
Subscribe to:
Posts (Atom)
