முன்னோரின் அலங்காரங்கள்
அருவெறுப்பூட்டுவன
மேலிரண்டு வரிகள் போன்றே!
தன் மனதைத் தைத்து
அதனூடாய்ப் பிறந்தன தவிர்த்து
எதைத்தான் ரசிக்க இயலும்?
சென்ற நொடியிற் பிறந்தன
வெட்கமூட்டுவன தவிர்க்கவியலாது.
அறியப்படுமுன் வெறுக்கப்படுதலே
பிறப்பனவற்றின் ஒரே விதி போலும்.
தன்சந்ததி உண்டு வாழும்
என் உணர்வுக்கிழம் எதுவோ, யாரோ?
Showing posts with label எண்ணவோட்டம். Show all posts
Showing posts with label எண்ணவோட்டம். Show all posts
Saturday, May 17, 2008
Saturday, April 07, 2007
விமான நிலையத்தில் நுழைந்தபோது...
ஆசையுடன் வளர்த்த தாடி
திடீரென்று அந்நியமாயிற்று.
உலகின் சந்தோஷத்தில்
பங்கு பெற மறுக்கும் என் பிடிவாதம்
எனக்கே குமட்டிற்று.
'உப்பு கொஞ்சம் தூக்கல்'
ஒப்புக்குக் குறைசொல்லும்
நாத்தனார் குரலாய்,
என் முகத்தில்
இன்னும் அப்பியிருக்கிறது
முப்பது நாள் தாடி.
திடீரென்று அந்நியமாயிற்று.
உலகின் சந்தோஷத்தில்
பங்கு பெற மறுக்கும் என் பிடிவாதம்
எனக்கே குமட்டிற்று.
'உப்பு கொஞ்சம் தூக்கல்'
ஒப்புக்குக் குறைசொல்லும்
நாத்தனார் குரலாய்,
என் முகத்தில்
இன்னும் அப்பியிருக்கிறது
முப்பது நாள் தாடி.
Thursday, February 01, 2007
சொற்சிலுவைகள்
சொற்களும்
நம்மைப் போன்றவையே!
கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.
பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.
சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.
நம்மைப் போன்றவையே!
கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.
பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.
சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.
Saturday, June 10, 2006
பிரார்த்தனை
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாரதியின் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனோ கண்ணில் கண்ணீர் பெருகிற்று. தேடினாலும் காரணம் கிடைக்கப் போவதில்லை. இந்த ஒலியலைகள் உள்ளே சென்று என்ன செய்கின்றனவென்று என்றுதான் அறிந்தேன்? காண்பதெல்லாம், ஏதோ அமைதி அல்லது நெகிழ்வு. ஏன்? தெரியாது. பக்தி? கேள்விகள் கேட்டு அதையும்தான் துரத்தியாயிற்றே. பக்தியுடன் எதையாவது பாடி அல்லது கேட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பிரார்த்தனை செய்தோ, இன்னுமதிகம் காலம்.
பிரார்த்தனை! ஒரு நண்பிக்காகப் பிரார்த்தனை செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். காதல் பிரச்சினைதான். பிரார்த்தனை செய்கிறேனென்று சொன்னால் என்ன பொருள்? என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று பொருள். அது தெரிந்துதான் தனக்காகப் பிரார்த்தனை செய்யக் கேட்டிருப்பாள். பிச்சைக்காரனிடம் பொன் குடமா கேட்பார்கள்? அவளுக்குத் தெரியாது, இந்தப் பிச்சைக்காரனிடம் திருவோடு கூட இல்லையென்று.
எத்தனை துயரங்கள்? எத்தனை பிரச்சினைகள்? வெவ்வேறு மதம். ஊர் என்ன சொல்லும்? அவன் என்ன சொல்வான்? இவன் என்ன சொல்வான்? அம்மா வருந்துவாரே! அப்பா வருந்துவாரே! குடும்ப கௌரவம் என்னாவது? மதம் மாற முடியாது, சுயமே அனுமதிக்காது அதை.
இதோ பிரார்த்திக்கிறேன். உனக்காக. தடை தாண்டி வெல்லும் திறன் உனக்குண்டு பெண்ணே! மகிழ்வுற்றிரு! இறையொன்றிருந்தாலும் இல்லையென்றாலும், அது கருணை வடிவமென்பது உண்மையென்றாலும், அல்லது ஒன்றையொன்று உண்டு வாழும் உயிர் படைத்துக் கண்டு களிப்புற்று வாழும் சக்தியென்றாலும், உன் வாழ்வு சிறப்புற வேண்டுகிறேன்!
உள்ளத் தெளிவோடிரு; உன் அன்பை நம்பு. அது உன்னைக் கரைசேர்க்கும். அது மட்டுமே!
பிரார்த்தனை! ஒரு நண்பிக்காகப் பிரார்த்தனை செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். காதல் பிரச்சினைதான். பிரார்த்தனை செய்கிறேனென்று சொன்னால் என்ன பொருள்? என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று பொருள். அது தெரிந்துதான் தனக்காகப் பிரார்த்தனை செய்யக் கேட்டிருப்பாள். பிச்சைக்காரனிடம் பொன் குடமா கேட்பார்கள்? அவளுக்குத் தெரியாது, இந்தப் பிச்சைக்காரனிடம் திருவோடு கூட இல்லையென்று.
எத்தனை துயரங்கள்? எத்தனை பிரச்சினைகள்? வெவ்வேறு மதம். ஊர் என்ன சொல்லும்? அவன் என்ன சொல்வான்? இவன் என்ன சொல்வான்? அம்மா வருந்துவாரே! அப்பா வருந்துவாரே! குடும்ப கௌரவம் என்னாவது? மதம் மாற முடியாது, சுயமே அனுமதிக்காது அதை.
இதோ பிரார்த்திக்கிறேன். உனக்காக. தடை தாண்டி வெல்லும் திறன் உனக்குண்டு பெண்ணே! மகிழ்வுற்றிரு! இறையொன்றிருந்தாலும் இல்லையென்றாலும், அது கருணை வடிவமென்பது உண்மையென்றாலும், அல்லது ஒன்றையொன்று உண்டு வாழும் உயிர் படைத்துக் கண்டு களிப்புற்று வாழும் சக்தியென்றாலும், உன் வாழ்வு சிறப்புற வேண்டுகிறேன்!
உள்ளத் தெளிவோடிரு; உன் அன்பை நம்பு. அது உன்னைக் கரைசேர்க்கும். அது மட்டுமே!
Labels:
எண்ணவோட்டம்,
காதல்,
பிரார்த்தனை
Tuesday, April 11, 2006
என் சவக்கிடங்கில் ஒரு புதிய வருகை
மனதின் ஏதோ ஓர் மூலையினின்றும்
தலை காட்டிற்று அது.
தாவிப் பிடித்துத்
துவக்கு விசாரணையை.
ஏன், எதற்கு, எப்படி,
யார், எங்கு, எப்போது,
இன்ன பல கேள்விகள்.
தத்துவப் படுக்கையில் தள்ளி
அறுத்தும் ஆராய்ந்து விடு.
எப்படியும் வர வேண்டும்,
ஒரு முடிவு, வந்தே விட்டது.
இனி அலங்காரம்தான்.
புதிதான, புதிரான சொற்கள்,
சொல்லடுக்குகள் கொண்டு.
எதுகை மோனை வேண்டாம்,
அது பழைய காலம்.
கூர்மையாக்கு, இறுக்கமாக்கு
மூச்சுத் திணறாது;
அறுத்தபோதே இறந்தாயிற்று.
ஆயிற்றா,
அப்படியே தள்ளி வந்து,
சவக்கிடங்கில் அழகாக நிறுத்து.
காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரசிக்கவும், ருசிக்கவும்,
பாராட்டவும், பரிசளிக்கவும்,
இன்னும் ஆராய்ந்து,
அதைக் கொண்டு
தத்தம் சவக்கிடங்கை அலங்கரிக்கவும்.
தலை காட்டிற்று அது.
தாவிப் பிடித்துத்
துவக்கு விசாரணையை.
ஏன், எதற்கு, எப்படி,
யார், எங்கு, எப்போது,
இன்ன பல கேள்விகள்.
தத்துவப் படுக்கையில் தள்ளி
அறுத்தும் ஆராய்ந்து விடு.
எப்படியும் வர வேண்டும்,
ஒரு முடிவு, வந்தே விட்டது.
இனி அலங்காரம்தான்.
புதிதான, புதிரான சொற்கள்,
சொல்லடுக்குகள் கொண்டு.
எதுகை மோனை வேண்டாம்,
அது பழைய காலம்.
கூர்மையாக்கு, இறுக்கமாக்கு
மூச்சுத் திணறாது;
அறுத்தபோதே இறந்தாயிற்று.
ஆயிற்றா,
அப்படியே தள்ளி வந்து,
சவக்கிடங்கில் அழகாக நிறுத்து.
காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரசிக்கவும், ருசிக்கவும்,
பாராட்டவும், பரிசளிக்கவும்,
இன்னும் ஆராய்ந்து,
அதைக் கொண்டு
தத்தம் சவக்கிடங்கை அலங்கரிக்கவும்.
என் இன்பம் எதில்?
நண்பர் பாழ் எழுதிய கவிதை 'தேடாதே, தொலைந்து போவாய்' -இன் தூண்டுதலில் எழுதியது...
பாழ்,
நான் நினைப்பது...தேடல் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேட வேண்டாம் என்றுதான் நீங்களும் சொல்கிறீர்கள். மற்றபடி எப்போதும் எல்லோரும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம், இல்லையா? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், நாம் எல்லோரும் தேடுவது இன்பம் என்று சொல்லலாமா? இந்த இன்பம் எதில் என்பதில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறோம். இன்னொருவருடன் மட்டுமல்ல, நமக்குள்ளேயே, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருள் நமக்கு இன்பம் அளிப்பதாகத் தோன்றுகிறது. அதுவும் போக, நாம் நாடுவது இன்பம் ஆனாலும், துன்பம் வராமற் போவதுமில்லை. இதுதான் நம்மைத் துன்பம் இல்லாத நிலைத்த இன்பம் எது என்று தேடத் தூண்டுகிறது. இந்தத் தேடல், முடிவாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதில் முடிகிறது.
இன்னொரு வகையில் பார்த்தால், நம் முன் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்தான் எத்தனை எத்தனை? அடுத்த நொடியில், நான் செய்யத் தகுந்ததாக இருக்கும் காரியங்கள் எத்தனை ஆயிரம்? அதில் எதைச் செய்வது என்ற கேள்வி வரும்போது, நான் எதைத் தேர்ந்தெடுப்பது? குறிக்கோள் ஒன்று வைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்று சொல்வார்கள். என் பிரச்சினை, நான் அதிலும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறேன். கடைசியில் வரும் கேள்வி இதுதான், வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
ஆக, பேராசைதான் பிரச்சினை என்று தோன்றுகிறது. 'கேட்பினும் பெரிது கேள்' என்று சொன்னார்கள். எது பெரிது என்று அறிவதில் வாழ்க்கையைத் தொலைக்கிறோம். இதை விட்டு விட்டு, வேறு ஏதாவதைத் தேடேன் என்றால், பொருள், பதவி, மானுட நன்மை, ஒற்றுமை என்று எதையாவது தேடலாம்தான். இத்தனை காலமாக மனிதர்கள் இவை எல்லாவற்றையும் தேடியதில் என்ன நிகழ்ந்திருக்கிறது? எப்படிப்பட்ட உலகை அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்று அக்கறை சார்ந்த கேள்வி வருகிறது. இதுவும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தூண்டுகிறது.
கீதை சொல்கிறது. 'பயனை எதிர்பாராதே, கடமையைச் செய்' என்று. ஒரு வேளை, அது சொல்வது, எதையோ தேடாதே, இந்த நொடியில் செய்ய வேண்டியதைச் செய் என்றா? என்றாலும், என் கடமை என்னவென்பதை யார் முடிவு செய்வது? நிச்சயமாக என் தந்தையின் கடமை அல்ல. என் கடமையைத் தேடும்போதும் நான் முட்டி நிற்பது நம் கேள்வியில்தான்.
மீண்டும், இன்பம் குறித்துப் பேசினால், 'என் இன்பம் பணக்காரனாவதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்', 'என் இன்பம் அதிகாரம் சம்பாதிப்பதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்' என்றெல்லாம் யார் சொன்னாலும் அதில் தவறு இல்லைதானே. (மற்றவர்களைத் துன்புறுத்தாமல், என்று ஓர் இணைப்பு சேர்க்கச் சொல்லாதீர்கள், மீண்டும் அது நமது கேள்வி நோக்கித் தள்ளி விடும்). இங்கு நான் சொல்வது, 'என் இன்பம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை, எனவேதான் எதில் இன்பம் என்று தேடுகிறேன்' என்று.
இப்போது என்னிடம் இரண்டு விஷயங்கள் இந்தத் தேடலைத் தூண்டுவதாக இருக்கின்றன. ஒன்று இன்பம், மற்றது நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவின்மை. இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். நான் என்னதான் எனக்கென்று ஒரு செயலை வகுத்துக் கொண்டாலும், அதன் காரணம் என் இன்பம் அதில் இருப்பதுதான். ஆக, நாம் தேடுவது இன்பம் என்பதுதான்.
இப்போது ஓர் அதிர்ச்சியான எண்ணம் வருகிறது. நான் ஏன் எதிலும் இன்பம் காணாமல், தேடிக் கொண்டே இருக்கிறேன்? என்னுடைய எதிர்மறைச் சிந்தனை காரணமா? தாழ்வு மனப்பான்மையா? மற்றவர்களது வெற்றியை ஒப்புக் கொள்ள இயலாமல், 'நான் கண்டுபிடிக்கிறேன் பார் இதிலும் பெரிது' என்று எண்ணும் அசூயையா?
அல்லது, எதையாவது தேடுவதென்று ஆயிற்று. நான் இதைத் தேடி விட்டுப் போகிறேன், இதிலென்ன தவறு? இதற்குத்தான் நீங்கள் பதில் சொல்கிறீர்கள், 'தேடிக் கொள், ஆனால் உன் வலையில் நீயே சிக்கி மீளத் தெரியாமல் புலம்புவாய், துவளுவாய்' என்று. உண்மை, நீங்கள் என் முந்தைய பதிவுகளில் இதற்கான அடையாளத்தைக் கண்டிருக்கவும் கூடும். ஆனால் அதன் பின்னும் தேடிக் கொண்டேயிருப்பதன் காரணம் என்ன? ஒரு வேளை என் இன்பம் இந்தப் புலம்பலில்தானோ? துவண்டு விழுவதில்தான் நான் இன்பம் காண்கிறேனோ?
எனக்குத் தோன்றுகிறது, என் இன்பம் பதில் தெரியாத கேள்விகளை அடுக்குவதில்தான் என்று. ம்ம்ம்...
பாழ்,
நான் நினைப்பது...தேடல் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேட வேண்டாம் என்றுதான் நீங்களும் சொல்கிறீர்கள். மற்றபடி எப்போதும் எல்லோரும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம், இல்லையா? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், நாம் எல்லோரும் தேடுவது இன்பம் என்று சொல்லலாமா? இந்த இன்பம் எதில் என்பதில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறோம். இன்னொருவருடன் மட்டுமல்ல, நமக்குள்ளேயே, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருள் நமக்கு இன்பம் அளிப்பதாகத் தோன்றுகிறது. அதுவும் போக, நாம் நாடுவது இன்பம் ஆனாலும், துன்பம் வராமற் போவதுமில்லை. இதுதான் நம்மைத் துன்பம் இல்லாத நிலைத்த இன்பம் எது என்று தேடத் தூண்டுகிறது. இந்தத் தேடல், முடிவாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதில் முடிகிறது.
இன்னொரு வகையில் பார்த்தால், நம் முன் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்தான் எத்தனை எத்தனை? அடுத்த நொடியில், நான் செய்யத் தகுந்ததாக இருக்கும் காரியங்கள் எத்தனை ஆயிரம்? அதில் எதைச் செய்வது என்ற கேள்வி வரும்போது, நான் எதைத் தேர்ந்தெடுப்பது? குறிக்கோள் ஒன்று வைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்று சொல்வார்கள். என் பிரச்சினை, நான் அதிலும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறேன். கடைசியில் வரும் கேள்வி இதுதான், வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
ஆக, பேராசைதான் பிரச்சினை என்று தோன்றுகிறது. 'கேட்பினும் பெரிது கேள்' என்று சொன்னார்கள். எது பெரிது என்று அறிவதில் வாழ்க்கையைத் தொலைக்கிறோம். இதை விட்டு விட்டு, வேறு ஏதாவதைத் தேடேன் என்றால், பொருள், பதவி, மானுட நன்மை, ஒற்றுமை என்று எதையாவது தேடலாம்தான். இத்தனை காலமாக மனிதர்கள் இவை எல்லாவற்றையும் தேடியதில் என்ன நிகழ்ந்திருக்கிறது? எப்படிப்பட்ட உலகை அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்று அக்கறை சார்ந்த கேள்வி வருகிறது. இதுவும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தூண்டுகிறது.
கீதை சொல்கிறது. 'பயனை எதிர்பாராதே, கடமையைச் செய்' என்று. ஒரு வேளை, அது சொல்வது, எதையோ தேடாதே, இந்த நொடியில் செய்ய வேண்டியதைச் செய் என்றா? என்றாலும், என் கடமை என்னவென்பதை யார் முடிவு செய்வது? நிச்சயமாக என் தந்தையின் கடமை அல்ல. என் கடமையைத் தேடும்போதும் நான் முட்டி நிற்பது நம் கேள்வியில்தான்.
மீண்டும், இன்பம் குறித்துப் பேசினால், 'என் இன்பம் பணக்காரனாவதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்', 'என் இன்பம் அதிகாரம் சம்பாதிப்பதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்' என்றெல்லாம் யார் சொன்னாலும் அதில் தவறு இல்லைதானே. (மற்றவர்களைத் துன்புறுத்தாமல், என்று ஓர் இணைப்பு சேர்க்கச் சொல்லாதீர்கள், மீண்டும் அது நமது கேள்வி நோக்கித் தள்ளி விடும்). இங்கு நான் சொல்வது, 'என் இன்பம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை, எனவேதான் எதில் இன்பம் என்று தேடுகிறேன்' என்று.
இப்போது என்னிடம் இரண்டு விஷயங்கள் இந்தத் தேடலைத் தூண்டுவதாக இருக்கின்றன. ஒன்று இன்பம், மற்றது நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவின்மை. இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். நான் என்னதான் எனக்கென்று ஒரு செயலை வகுத்துக் கொண்டாலும், அதன் காரணம் என் இன்பம் அதில் இருப்பதுதான். ஆக, நாம் தேடுவது இன்பம் என்பதுதான்.
இப்போது ஓர் அதிர்ச்சியான எண்ணம் வருகிறது. நான் ஏன் எதிலும் இன்பம் காணாமல், தேடிக் கொண்டே இருக்கிறேன்? என்னுடைய எதிர்மறைச் சிந்தனை காரணமா? தாழ்வு மனப்பான்மையா? மற்றவர்களது வெற்றியை ஒப்புக் கொள்ள இயலாமல், 'நான் கண்டுபிடிக்கிறேன் பார் இதிலும் பெரிது' என்று எண்ணும் அசூயையா?
அல்லது, எதையாவது தேடுவதென்று ஆயிற்று. நான் இதைத் தேடி விட்டுப் போகிறேன், இதிலென்ன தவறு? இதற்குத்தான் நீங்கள் பதில் சொல்கிறீர்கள், 'தேடிக் கொள், ஆனால் உன் வலையில் நீயே சிக்கி மீளத் தெரியாமல் புலம்புவாய், துவளுவாய்' என்று. உண்மை, நீங்கள் என் முந்தைய பதிவுகளில் இதற்கான அடையாளத்தைக் கண்டிருக்கவும் கூடும். ஆனால் அதன் பின்னும் தேடிக் கொண்டேயிருப்பதன் காரணம் என்ன? ஒரு வேளை என் இன்பம் இந்தப் புலம்பலில்தானோ? துவண்டு விழுவதில்தான் நான் இன்பம் காண்கிறேனோ?
எனக்குத் தோன்றுகிறது, என் இன்பம் பதில் தெரியாத கேள்விகளை அடுக்குவதில்தான் என்று. ம்ம்ம்...
Saturday, March 25, 2006
நானும் நானோ? - 2
இப்பதிவு, சென்ற பதிவின் (நானும் நானோ?) பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக வருவது.
'நான்' என்பதுதான் எல்லாவற்றையும் பின்னிருந்து (அல்லது உள்ளிருந்து) நடத்துவது. இந்த 'நான்'-ஆல் உருவாக்கப்பட்டது, தொகுக்கப்பட்டது மனம். இந்த மனம் வளர்ச்சியடைந்த நிலையில், நுண்ணியவற்றை ஆராயும் வல்லமை பெற்றதாகிறது. அது தனது மூலமாகிய 'நான்'-ஐ ஆராயும்போதுதான் நான் முன்பு கூறிய தத்துவம் உருவாகிறது. செயப்படுபொருள் எழுவாயை ஆராய்வதால், இது மிகவும் சிக்கலாகிறது.
அதே நேரத்தில், இந்த மனம் 'நான்'-ஆல் இயக்கப்பட்டபோதும், 'நான்'-ஐ மறந்து அல்லது பொருட்படுத்தாமல் இருக்கும்போது நேரக்கூடிய ஓர் அழகிய தருணத்தைத்தான் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஒரு நாய்க்குட்டி மடியில் கிடந்து விளையாடும்போது, மனம் 'நான்' என்ற வெளிப்படையான, ஒருமுகமான உணர்வு இல்லாமல் அடையும் இன்பம் குறைந்ததா என்ன?
ஏனோ, நாம்தான் இன்பம் நிலையானதல்ல. நிலையான இன்பம் பெற, இந்த 'நான்'-இன் மூலத்தை அறிந்து, ஆராய்ந்து உணர வேண்டுமென்று முயல்கிறோம். அது ஒரு வகையான வறட்சி நிலைக்கு இட்டுச் செல்கிறதல்லவா? ஒரு வேளை முதிர்ச்சியடைந்த நிலையில் அந்த முழுமையை அடையக் கூடுமோ என்னவோ? ஆயினும், நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தும் எதிலும் இன்பம் இருக்க முடியுமா என்ன? அப்படி இருந்தாலும், அது சுய இன்பத்தை விடவும் கீழானதல்லவா?
எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும். ஆனால், நானோ, தத்துவம் என்று நான் கருதும் ஏதோ ஒன்றை இந்த வெறுமையில் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன். ஓர் எளிமையான, அழகான தருணம் (நான் தருணமென்பது, பொருளாகவோ, செயலாகவோ, உணர்வாகவோ அல்லது எண்ணமாகக் கூடவோ இருக்கலாம்), இந்தத் தத்துவத்தின் இயலாமையை அழகாக உணர்த்திச் செல்லும்.
இதோ, இப்போது கூட என் 'மனதில்' தோன்றியவற்றை இட்டு இப்பதிவை நிரப்பி விட்டேன். இதை மீண்டும் படிக்கும்போது எழும் கேள்விகளுக்கோ குறைவில்லை.
நான் எப்போதும் கூறுவது போல, இப் பதிவு அதை நான் எழுதும் நொடியில் எனக்குச் சரியென்று பட்டவற்றின் தொகுப்பு மட்டுமே.
'நான்' என்பதுதான் எல்லாவற்றையும் பின்னிருந்து (அல்லது உள்ளிருந்து) நடத்துவது. இந்த 'நான்'-ஆல் உருவாக்கப்பட்டது, தொகுக்கப்பட்டது மனம். இந்த மனம் வளர்ச்சியடைந்த நிலையில், நுண்ணியவற்றை ஆராயும் வல்லமை பெற்றதாகிறது. அது தனது மூலமாகிய 'நான்'-ஐ ஆராயும்போதுதான் நான் முன்பு கூறிய தத்துவம் உருவாகிறது. செயப்படுபொருள் எழுவாயை ஆராய்வதால், இது மிகவும் சிக்கலாகிறது.
அதே நேரத்தில், இந்த மனம் 'நான்'-ஆல் இயக்கப்பட்டபோதும், 'நான்'-ஐ மறந்து அல்லது பொருட்படுத்தாமல் இருக்கும்போது நேரக்கூடிய ஓர் அழகிய தருணத்தைத்தான் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஒரு நாய்க்குட்டி மடியில் கிடந்து விளையாடும்போது, மனம் 'நான்' என்ற வெளிப்படையான, ஒருமுகமான உணர்வு இல்லாமல் அடையும் இன்பம் குறைந்ததா என்ன?
ஏனோ, நாம்தான் இன்பம் நிலையானதல்ல. நிலையான இன்பம் பெற, இந்த 'நான்'-இன் மூலத்தை அறிந்து, ஆராய்ந்து உணர வேண்டுமென்று முயல்கிறோம். அது ஒரு வகையான வறட்சி நிலைக்கு இட்டுச் செல்கிறதல்லவா? ஒரு வேளை முதிர்ச்சியடைந்த நிலையில் அந்த முழுமையை அடையக் கூடுமோ என்னவோ? ஆயினும், நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தும் எதிலும் இன்பம் இருக்க முடியுமா என்ன? அப்படி இருந்தாலும், அது சுய இன்பத்தை விடவும் கீழானதல்லவா?
எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும். ஆனால், நானோ, தத்துவம் என்று நான் கருதும் ஏதோ ஒன்றை இந்த வெறுமையில் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன். ஓர் எளிமையான, அழகான தருணம் (நான் தருணமென்பது, பொருளாகவோ, செயலாகவோ, உணர்வாகவோ அல்லது எண்ணமாகக் கூடவோ இருக்கலாம்), இந்தத் தத்துவத்தின் இயலாமையை அழகாக உணர்த்திச் செல்லும்.
இதோ, இப்போது கூட என் 'மனதில்' தோன்றியவற்றை இட்டு இப்பதிவை நிரப்பி விட்டேன். இதை மீண்டும் படிக்கும்போது எழும் கேள்விகளுக்கோ குறைவில்லை.
நான் எப்போதும் கூறுவது போல, இப் பதிவு அதை நான் எழுதும் நொடியில் எனக்குச் சரியென்று பட்டவற்றின் தொகுப்பு மட்டுமே.
Tuesday, March 14, 2006
நானும் நானோ?
பாழ் எழுதிய 'நீயாகிய நீ' கவிதையால் தூண்டப்பட்டு...
என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?
என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?
Sunday, February 26, 2006
நேற்று

நேற்று, 'Gone with the wind' (Margaret Mitchell) படித்து முடித்தேன். இடையில் சிறிது இழுத்தது போல் தோன்றினாலும், மிகவும் அருமையான நாவல். எல்லா நல்ல நாவல்களையும் போல, முடித்த பின், சற்று நேரம் இருந்து யோசிக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அதன் கதாபாத்திரங்கள் மனதிலிருந்து நீங்கப் போவதில்லை.
முடித்தேனா? அடுத்து, பாலகுமாரனின் 'பயணிகள் கவனிக்கவும்' மூன்றாவது முறையாகப் படிக்கத் தொடங்கினேன். இதைக் கடைசியாகப் படித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கங்கு வெட்டி, படித்து முடித்தேன், அப்படியொன்றும் சிறந்த நாவலாக இப்போது தோன்றவில்லை என்றாலும். பிறகு, வார இறுதியின் மிகப் பெரிய வேலையான துணி துவைப்பதை முடித்தேன்.
முடித்தேனா? அடுத்து, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து 'குயில் பாட்டு'. அதன் பின், 'கண்ணன் பாட்டு'.
இத்தகையதொரு நாள் புதிதில்லை எனக்கு. ஒரே நாளில் இவ்வளவு படிப்பதுவும் புதிதில்லைதான். வீட்டில் தனியாக இருந்தேன், அதுவும் புதிதில்லை. கல்லூரி நாட்களில் நான் மிகவும் ரசித்தது, அறை நண்பர்களனைவரும் ஊருக்குப் போய் விட்ட நாட்களைத்தான். பெங்களூர் வந்த பிறகு கூட, பெயர் தெரியாத தெருக்களில், பூங்காக்களில், ஏதோ கன்னட நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளில் எனத் தனியாக அலைந்ததுண்டு.
நேற்று இயலவில்லை. 'வார்த்தை தவறி விட்டாய்' படித்ததும், புத்தகத்தை மூடி வைத்தேன். சட்டையை அணிந்து கொண்டேன். வீட்டை விட்டுக் கிளம்பி, தெருக்களில் இலக்கின்றி நடக்கத் தொடங்கினேன். வெறும் 'போர்' அடித்ததுதான் காரணம் என்று நினைத்தேன்.
இல்லை போலிருக்கிறது.
Saturday, February 18, 2006
ஏதாவது எழுத
மீண்டும்
இந்த வலைப்பூவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. முதலில் இட்ட சில பதிவுகளைத் தவிர வேறு ஒன்றும் காணாதிருந்த இதில் மீண்டும் எனது ஈடுபாடு வந்திருக்கிறது. எத்தனை நாள் நீடிக்குமென்று அறியேன்.
சென்ற பதிவு, நீண்ட நாட்களுக்கு முன் இதற்கு முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதியதுதான்.
இப்போதும் 'ஏன் எழுத வேண்டும்' என்ற கேள்விக்குப் பதில் ஒன்றும் கிடைத்து விடவில்லைதான். ஆனால், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்திருக்கிறது.
மூன்று வயதில், எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஆறு வயதில், புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? கேள்விகள் கேட்காமல் எல்லாவற்றையும் செய்தேனே? ஆனால், சிலவற்றை மறைத்துச் செய்ததும் உண்டு. ஏழு வயதில், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் படிப்பது அறிந்தால் அப்பா திட்டுவாரோ என்ற பயத்தால், ஒளிந்து கிடந்து படித்ததுண்டு. அப்பா திட்டுவார் என்ற பயம் ஏன் வந்தது? வேறு எதற்காவது திட்டு வாங்கிய அனுபவமா? அல்லது, இப் புத்தகங்களில் நான் அறிந்து கொள்ளக் கூடாத ஏதோ ஒன்று உள்ளதென்று தோன்றியதன் விளைவா? பதினோரு வயதில், பேருந்தில் மாணவிகள் உள்ள இடத்தில் சென்று நிற்க வேண்டுமென்று ஏன் தோன்றியது? ஆனால் அப்படி நிற்கக் கூடாது என்றொரு எண்ணமும் ஏன் உடனே தோன்றியது? இந்த இரண்டையும் கவனித்த மனதில் வியப்பொன்று ஏன் தோன்றியது?
இப்படி வாழ்வில் செய்த, செய்யாத பல காரியங்களுக்கு ஏன் என்று கேள்வி கேட்டதேயில்லை. கேட்டிருந்தால், இன்னும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்திருப்பேனோ என்னவோ? ஆனால், அப்படி நின்று விட்டால்தான் என்னவாம்? நில்லாமல் ஓடி வந்ததில் கண்டதுதான் என்ன?
ஆக, ஏனென்று கேட்டதில் தவறில்லை. கேளாதிருந்ததிலும் தவறில்லை. இப்போது எழுதினாலும் தவறில்லை. அதைச் சுய விளம்பரத்துக்காக எழுதினாலும் தவறில்லை; (மயில் ஆடுவது சுய விளம்பரமில்லாமல் என்ன? செடி பூப்பது சுய விளம்பரமில்லாமல் என்ன?) சுய திருப்திக்காக எழுதினாலும் தவறில்லை; அல்லது சும்மா எழுதினாலும் தவறில்லை. எழுதாமலிருந்தாலும் தவறில்லை.
இந்த வலைப்பூவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. முதலில் இட்ட சில பதிவுகளைத் தவிர வேறு ஒன்றும் காணாதிருந்த இதில் மீண்டும் எனது ஈடுபாடு வந்திருக்கிறது. எத்தனை நாள் நீடிக்குமென்று அறியேன்.
சென்ற பதிவு, நீண்ட நாட்களுக்கு முன் இதற்கு முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதியதுதான்.
இப்போதும் 'ஏன் எழுத வேண்டும்' என்ற கேள்விக்குப் பதில் ஒன்றும் கிடைத்து விடவில்லைதான். ஆனால், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்திருக்கிறது.
மூன்று வயதில், எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஆறு வயதில், புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? கேள்விகள் கேட்காமல் எல்லாவற்றையும் செய்தேனே? ஆனால், சிலவற்றை மறைத்துச் செய்ததும் உண்டு. ஏழு வயதில், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் படிப்பது அறிந்தால் அப்பா திட்டுவாரோ என்ற பயத்தால், ஒளிந்து கிடந்து படித்ததுண்டு. அப்பா திட்டுவார் என்ற பயம் ஏன் வந்தது? வேறு எதற்காவது திட்டு வாங்கிய அனுபவமா? அல்லது, இப் புத்தகங்களில் நான் அறிந்து கொள்ளக் கூடாத ஏதோ ஒன்று உள்ளதென்று தோன்றியதன் விளைவா? பதினோரு வயதில், பேருந்தில் மாணவிகள் உள்ள இடத்தில் சென்று நிற்க வேண்டுமென்று ஏன் தோன்றியது? ஆனால் அப்படி நிற்கக் கூடாது என்றொரு எண்ணமும் ஏன் உடனே தோன்றியது? இந்த இரண்டையும் கவனித்த மனதில் வியப்பொன்று ஏன் தோன்றியது?
இப்படி வாழ்வில் செய்த, செய்யாத பல காரியங்களுக்கு ஏன் என்று கேள்வி கேட்டதேயில்லை. கேட்டிருந்தால், இன்னும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்திருப்பேனோ என்னவோ? ஆனால், அப்படி நின்று விட்டால்தான் என்னவாம்? நில்லாமல் ஓடி வந்ததில் கண்டதுதான் என்ன?
ஆக, ஏனென்று கேட்டதில் தவறில்லை. கேளாதிருந்ததிலும் தவறில்லை. இப்போது எழுதினாலும் தவறில்லை. அதைச் சுய விளம்பரத்துக்காக எழுதினாலும் தவறில்லை; (மயில் ஆடுவது சுய விளம்பரமில்லாமல் என்ன? செடி பூப்பது சுய விளம்பரமில்லாமல் என்ன?) சுய திருப்திக்காக எழுதினாலும் தவறில்லை; அல்லது சும்மா எழுதினாலும் தவறில்லை. எழுதாமலிருந்தாலும் தவறில்லை.
ஏன் எழுத? - 2
ஏன் எழுத வேண்டும்? - 2
சும்மா, ஒரு திருப்திக்காக, ஆத்ம திருப்தி என்று பெயர் செய்து கொண்டு, தனது பெயரைப் பிறர் உச்சரிப்பதில் இன்பங் காணுபவனாக, தன்னைப் பிறருக்கு அடையாளம் தெரிவதில் மகிழ்பவனாக எழுதுபவர்களும் உண்டு. அதாவது ஈகோவுக்கு உணவிடுவதற்காக. அது தவறா என்ற வாதத்திற்கு நான் செல்லவில்லை. நான் அதைச் செய்யப் போகிறேனா என்று எனக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதான். ஒருவேளை நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேனோ, என்னவோ? மனித மனம்தான் எவ்வளவு விசித்திரமானது! எனக்கு இன்னும் தெரியவில்லை.
என் மனத்தினுள்ளும் இப்படி ஓர் ஆசை உள்ளூர இருப்பதை நான் அவ்வப்போது அறிய நேர்ந்திருக்கிறது. ஒன்றும் இல்லாமலா வீசியெறியக் கூடிய காகிதத்தில் எழுதாமல், உலகம் முழுதும் காண வாய்ப்பிருக்கும் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை? என்றாலும், ஏதாவது எழுதி, பெயர் வாங்கி விட வேண்டும் என்பதை விட, எழுத்து என்பதன் வலிமையையும், பொறுப்பையும் ஒருங்கே உணர்ந்து, ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியுமா என்று முயல்வதுதான் எனது எண்ணமாக இருக்கிறது. உருப்படியாக யாருக்குச் செய்ய எண்ணம்? உண்மையில் எனக்குத்தான். எனக்குத்தானெனில் இதில் எழுத்தின் வலிமையும், பொறுப்பும் எங்கிருந்து வந்தன? அதை விட, எனது தேவைகளும், குறிக்கோள்களுமல்லவா முக்கியமாக இருக்கும்! உண்மைதான். ஓரளவு நெருங்கி வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லையென்று தோன்றுகிறது. என்னுடைய டைரியில் எழுதிக்கொள்ளலாமே! அல்லது கணினியில் ஆனாலும் எனக்கே எனக்கென்று ஒரு file-ல் வைத்துக் கொள்ளலாமே! ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? ஏன்?
ஒவ்வொருவரும், தனக்கென்று செய்து கொள்வது, தன்னை மட்டும் மனதில் வைத்து அல்ல. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று என் எண்ணங்கள் மூலம் முடிவு செய்கிறேனோ, அதையே நான் எனக்குச் செய்து கொள்கிறேன். உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லையென்றாலும், இந்த உலகத்தில் நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்றுதான் சிந்திக்கிறேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும், எல்லா வகைகளிலும் சிறந்த உலகத்தில் வாழவே விரும்புகிறோம். அந்த 'சிறந்த உலகம்' என்பதற்கான definition ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. என் சிறந்த உலகம் என்பது அடுக்கு மாடிக் குடியிருப்பும், அனைத்து வசதிகளும் கைக்கெட்டும் தூரத்திலும் என்பதாக இருந்தால், நான் அத்தகையதொரு இடத்தில் சென்று என்னை வைத்துக் கொள்கிறேன். அதுவன்றி, சுற்றிலும் வயல் சூழ்ந்த ஒரு குடிசையே சிறப்பு என்று தோன்றினால், நான் அங்கு செல்ல விரும்புகிறேன். எளிமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நான் கருதினால் மட்டுமே, எளிமையாக இருக்க முயல்கிறேன். நான் இந்த உலகத்துடன் என்னைப் பொருத்திப் பார்த்தே நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறேன். இதற்குக் காரணம் ஒருவன் தனித்துச் செயல்பட இயலாதவனாக இருப்பதல்ல. அவ்வாறு தனித்துச் செயல்படுவது அவனது இயல்பு அல்ல. அல்லது அவ்வாறு அவன் படைக்கப் படவில்லை.
இது சரிதானா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். இன்னும் பார்ப்போம். உலகில் பெரும்பான்மையோர், பிறந்து, வளர்ந்து ஒரு நல்ல வருமானம் தரும் வேலையைத் தேடிக் கொண்டு, மனைவி மக்கள் என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அதற்குக் காரணம், அதைத்தான் உலகம் இயல்பான வாழ்க்கை முறையாக அங்கீகரித்திருக்கிறது. சிலர், ஏதாவது செயற்கரிய செய்து, புகழ் பெற முயல்கின்றனர். காரணம், அதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். சிலர், உலகம் போகும் போக்கு குறித்துக் கவலை கொண்டவராக அதை மாற்றும், அல்லது சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம், அவர்களது உலகத்துக்கும் தமக்குமிடையேயான உறவைக் குறித்த எண்ணமும், அதன் மேலான அக்கறையும். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பெரும்பான்மை என்றால், உலகம் என்ன சொன்னால் என்ன என்பவர்களும், அதே உலகத்தைக் கவர்வதற்கான அல்லது அலட்சியப்படுத்துவதற்கான முயற்சியையே செய்கிறார்கள். ஆக, ஒருவன் தனித்தவனாக எந்த முடிவும் எடுப்பதாகத் தோன்றவில்லை. உலகம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்தே அவனது முடிவுகளும் அமைகின்றன.
இந்த வட்டத்தின் வெளியே வசிப்பவர்கள் யாரேனும் உண்டா? உண்டு. மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விட்டு விடுவோம். ஞானிகள் என்று யாரேனும் சொல்லக் கூடும். உலகத்தால் ஞானிகள் என்று அழைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் சில இலக்கணத்துக்குட்பட்டாக வேண்டும். உலகம் வகுத்த இலக்கணங்கள் எவையும் உலகத்தின் வெளியே இருப்பவையல்ல. இருந்தாலும், சிலர் உலகம் குறித்த எந்தக் கவலையுமின்றி, அக்கறையுமின்றி, பயமுமின்றி இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனினும் அந்த சிறுபான்மையை விட்டு விடுவோம். (அந்த நிலையை அடைவதற்குச் சில முயற்சிகள் தேவையெனில், அவர்களை அந்த முயற்சி எடுக்கத் தூண்டியதற்கு உலகமே காரணமாக அமைந்திருக்கலாம் அல்லவா!)
-தொடரும்
சும்மா, ஒரு திருப்திக்காக, ஆத்ம திருப்தி என்று பெயர் செய்து கொண்டு, தனது பெயரைப் பிறர் உச்சரிப்பதில் இன்பங் காணுபவனாக, தன்னைப் பிறருக்கு அடையாளம் தெரிவதில் மகிழ்பவனாக எழுதுபவர்களும் உண்டு. அதாவது ஈகோவுக்கு உணவிடுவதற்காக. அது தவறா என்ற வாதத்திற்கு நான் செல்லவில்லை. நான் அதைச் செய்யப் போகிறேனா என்று எனக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதான். ஒருவேளை நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேனோ, என்னவோ? மனித மனம்தான் எவ்வளவு விசித்திரமானது! எனக்கு இன்னும் தெரியவில்லை.
என் மனத்தினுள்ளும் இப்படி ஓர் ஆசை உள்ளூர இருப்பதை நான் அவ்வப்போது அறிய நேர்ந்திருக்கிறது. ஒன்றும் இல்லாமலா வீசியெறியக் கூடிய காகிதத்தில் எழுதாமல், உலகம் முழுதும் காண வாய்ப்பிருக்கும் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை? என்றாலும், ஏதாவது எழுதி, பெயர் வாங்கி விட வேண்டும் என்பதை விட, எழுத்து என்பதன் வலிமையையும், பொறுப்பையும் ஒருங்கே உணர்ந்து, ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியுமா என்று முயல்வதுதான் எனது எண்ணமாக இருக்கிறது. உருப்படியாக யாருக்குச் செய்ய எண்ணம்? உண்மையில் எனக்குத்தான். எனக்குத்தானெனில் இதில் எழுத்தின் வலிமையும், பொறுப்பும் எங்கிருந்து வந்தன? அதை விட, எனது தேவைகளும், குறிக்கோள்களுமல்லவா முக்கியமாக இருக்கும்! உண்மைதான். ஓரளவு நெருங்கி வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லையென்று தோன்றுகிறது. என்னுடைய டைரியில் எழுதிக்கொள்ளலாமே! அல்லது கணினியில் ஆனாலும் எனக்கே எனக்கென்று ஒரு file-ல் வைத்துக் கொள்ளலாமே! ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? ஏன்?
ஒவ்வொருவரும், தனக்கென்று செய்து கொள்வது, தன்னை மட்டும் மனதில் வைத்து அல்ல. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று என் எண்ணங்கள் மூலம் முடிவு செய்கிறேனோ, அதையே நான் எனக்குச் செய்து கொள்கிறேன். உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லையென்றாலும், இந்த உலகத்தில் நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்றுதான் சிந்திக்கிறேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும், எல்லா வகைகளிலும் சிறந்த உலகத்தில் வாழவே விரும்புகிறோம். அந்த 'சிறந்த உலகம்' என்பதற்கான definition ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. என் சிறந்த உலகம் என்பது அடுக்கு மாடிக் குடியிருப்பும், அனைத்து வசதிகளும் கைக்கெட்டும் தூரத்திலும் என்பதாக இருந்தால், நான் அத்தகையதொரு இடத்தில் சென்று என்னை வைத்துக் கொள்கிறேன். அதுவன்றி, சுற்றிலும் வயல் சூழ்ந்த ஒரு குடிசையே சிறப்பு என்று தோன்றினால், நான் அங்கு செல்ல விரும்புகிறேன். எளிமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நான் கருதினால் மட்டுமே, எளிமையாக இருக்க முயல்கிறேன். நான் இந்த உலகத்துடன் என்னைப் பொருத்திப் பார்த்தே நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறேன். இதற்குக் காரணம் ஒருவன் தனித்துச் செயல்பட இயலாதவனாக இருப்பதல்ல. அவ்வாறு தனித்துச் செயல்படுவது அவனது இயல்பு அல்ல. அல்லது அவ்வாறு அவன் படைக்கப் படவில்லை.
இது சரிதானா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். இன்னும் பார்ப்போம். உலகில் பெரும்பான்மையோர், பிறந்து, வளர்ந்து ஒரு நல்ல வருமானம் தரும் வேலையைத் தேடிக் கொண்டு, மனைவி மக்கள் என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அதற்குக் காரணம், அதைத்தான் உலகம் இயல்பான வாழ்க்கை முறையாக அங்கீகரித்திருக்கிறது. சிலர், ஏதாவது செயற்கரிய செய்து, புகழ் பெற முயல்கின்றனர். காரணம், அதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். சிலர், உலகம் போகும் போக்கு குறித்துக் கவலை கொண்டவராக அதை மாற்றும், அல்லது சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம், அவர்களது உலகத்துக்கும் தமக்குமிடையேயான உறவைக் குறித்த எண்ணமும், அதன் மேலான அக்கறையும். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பெரும்பான்மை என்றால், உலகம் என்ன சொன்னால் என்ன என்பவர்களும், அதே உலகத்தைக் கவர்வதற்கான அல்லது அலட்சியப்படுத்துவதற்கான முயற்சியையே செய்கிறார்கள். ஆக, ஒருவன் தனித்தவனாக எந்த முடிவும் எடுப்பதாகத் தோன்றவில்லை. உலகம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்தே அவனது முடிவுகளும் அமைகின்றன.
இந்த வட்டத்தின் வெளியே வசிப்பவர்கள் யாரேனும் உண்டா? உண்டு. மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விட்டு விடுவோம். ஞானிகள் என்று யாரேனும் சொல்லக் கூடும். உலகத்தால் ஞானிகள் என்று அழைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் சில இலக்கணத்துக்குட்பட்டாக வேண்டும். உலகம் வகுத்த இலக்கணங்கள் எவையும் உலகத்தின் வெளியே இருப்பவையல்ல. இருந்தாலும், சிலர் உலகம் குறித்த எந்தக் கவலையுமின்றி, அக்கறையுமின்றி, பயமுமின்றி இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனினும் அந்த சிறுபான்மையை விட்டு விடுவோம். (அந்த நிலையை அடைவதற்குச் சில முயற்சிகள் தேவையெனில், அவர்களை அந்த முயற்சி எடுக்கத் தூண்டியதற்கு உலகமே காரணமாக அமைந்திருக்கலாம் அல்லவா!)
-தொடரும்
Monday, March 15, 2004
ஏன் எழுத?
ஏன் எழுத வேண்டும்?
'ஏன் எழுத வேண்டும்?' என்ற கேள்வி எனக்கு மிகவும் பெரியதாகத் தோற்றமளிக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே, எழுதுவது, பேசுவது போன்ற காரியங்களுக்கு உண்டான காரணங்களைத் தேடுவதிலேயே, அவற்றைச் செய்வதற்கான வாய்ப்புகள் பலவற்றை இழந்திருக்கிறேன். அவை குறித்து வருத்தமொன்றுமில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை. நேற்று வரை பெரிய விஷயமாக எண்ணிக் கொண்டிருந்த ஒன்றை இன்று நான் முற்றிலுமாக அலட்சியம் செய்யுமளவு எண்ணங்கள் மாறுகின்றன. அதிகமாகப் படிப்பவர்களுக்கு இது இன்னும் அதிகமாக இருக்குமென்றே நம்புகிறேன். குழப்பம் மிக்கவர்களுக்குத்தான், தெளிவு இல்லாதவர்களுக்குத்தான் இது நிகழும் என்றும், மன உறுதியும், தெளிவும் உள்ளவர்க்கு இது போன்ற நிலை ஏற்படத் தேவையில்லை என்றும் கூறலாம். அவர்களுக்கு ஒருவேளை, இது அடிக்கடி நிகழாமல் போகலாம். ஆனால், கருத்துக்களில் மாற்றம் கட்டாயம் ஏதாவதொரு கட்டத்தில் நிகழும் ஒன்று என்பது எனது எண்ணம்.
இப்படியிருக்க, இன்று நான் (உலகமே தவறென்று மறுத்தாலும்) சரியென்று கருதுவன, நாளை என்னாலேயே நிராகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் நிறைந்த சூழலில், நான் ஏன் எழுதி மற்றவர்களது எண்ணங்களை ஆக்கிரமிக்க முயல வேண்டும்? அல்லது, நான் ஆக்கிரமிப்புக்காகவன்று, அங்கீகாரத்துக்காக மட்டுமே எழுதுகிறேன் என்பேனாகில், எனது அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதே ஐயத்துக்குரியதானபோது, பிறரது அங்கீகாரம் பெற்றுத்தான் என்ன பயன்?
இங்கு ஒரு விஷயம். இவையெல்லாம், நான் காலையில் என்ன சாப்பிட்டேன்; என்ன நிறத்தில் உடுத்தினேன்; எந்த நண்பருடன் அல்லது நண்பியுடன் குடித்தேன் என்றெல்லாம் எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகளே அல்ல. பொழுதுபோக்குக்காக, நண்பர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ளுவதற்காக, அயல்நாட்டிலிருந்து கொண்டு தமிழுடனான, தமிழருடனான உறவை வலுப்படுத்தும் விஷயமாக எழுதும்போது இவையும் அவரவரைப் பொறுத்த மட்டில் மிகவும் பயனுடையவையே. இவற்றில் மிகப்பல சுவாரசியமானவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே. சிலர் இவற்றினூடே, தங்களது உயர்ந்த கருத்துக்களையும், அல்லது நல்ல சிந்தனைகளுக்கு வித்திடுகின்ற விஷயங்களையும் எழுதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.
எனக்கு அவ்வாறு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சரி, அப்படி எதைத்தான் எழுதப் போகிறேன் என்றால், அதையும் இன்னும் முடிவு செய்யவில்லை. அதுதான் ஏன் எழுத வேண்டுமென்ற கேள்வியில் நிற்கிறேனே? மறுபடியும் அந்தக் கேள்விக்குப் போவோம்.
இப்போது எனது அறிவுக்கு எட்டிய விஷயங்கள் இரண்டு.
1. உலகத்தைத் திருத்த வேண்டுமென்று எழுத வேண்டியதில்லை. ஏனெனில், எனது கருத்து தவறென்று நாளை எனக்கு உதயமாகலாம்.
2. அங்கீகாரத்திற்காக எழுத வேண்டிய அவசியமுமில்லை. அதே காரணம்.
கண்டு பிடிப்போம்...
'ஏன் எழுத வேண்டும்?' என்ற கேள்வி எனக்கு மிகவும் பெரியதாகத் தோற்றமளிக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே, எழுதுவது, பேசுவது போன்ற காரியங்களுக்கு உண்டான காரணங்களைத் தேடுவதிலேயே, அவற்றைச் செய்வதற்கான வாய்ப்புகள் பலவற்றை இழந்திருக்கிறேன். அவை குறித்து வருத்தமொன்றுமில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை. நேற்று வரை பெரிய விஷயமாக எண்ணிக் கொண்டிருந்த ஒன்றை இன்று நான் முற்றிலுமாக அலட்சியம் செய்யுமளவு எண்ணங்கள் மாறுகின்றன. அதிகமாகப் படிப்பவர்களுக்கு இது இன்னும் அதிகமாக இருக்குமென்றே நம்புகிறேன். குழப்பம் மிக்கவர்களுக்குத்தான், தெளிவு இல்லாதவர்களுக்குத்தான் இது நிகழும் என்றும், மன உறுதியும், தெளிவும் உள்ளவர்க்கு இது போன்ற நிலை ஏற்படத் தேவையில்லை என்றும் கூறலாம். அவர்களுக்கு ஒருவேளை, இது அடிக்கடி நிகழாமல் போகலாம். ஆனால், கருத்துக்களில் மாற்றம் கட்டாயம் ஏதாவதொரு கட்டத்தில் நிகழும் ஒன்று என்பது எனது எண்ணம்.
இப்படியிருக்க, இன்று நான் (உலகமே தவறென்று மறுத்தாலும்) சரியென்று கருதுவன, நாளை என்னாலேயே நிராகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் நிறைந்த சூழலில், நான் ஏன் எழுதி மற்றவர்களது எண்ணங்களை ஆக்கிரமிக்க முயல வேண்டும்? அல்லது, நான் ஆக்கிரமிப்புக்காகவன்று, அங்கீகாரத்துக்காக மட்டுமே எழுதுகிறேன் என்பேனாகில், எனது அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதே ஐயத்துக்குரியதானபோது, பிறரது அங்கீகாரம் பெற்றுத்தான் என்ன பயன்?
இங்கு ஒரு விஷயம். இவையெல்லாம், நான் காலையில் என்ன சாப்பிட்டேன்; என்ன நிறத்தில் உடுத்தினேன்; எந்த நண்பருடன் அல்லது நண்பியுடன் குடித்தேன் என்றெல்லாம் எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகளே அல்ல. பொழுதுபோக்குக்காக, நண்பர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ளுவதற்காக, அயல்நாட்டிலிருந்து கொண்டு தமிழுடனான, தமிழருடனான உறவை வலுப்படுத்தும் விஷயமாக எழுதும்போது இவையும் அவரவரைப் பொறுத்த மட்டில் மிகவும் பயனுடையவையே. இவற்றில் மிகப்பல சுவாரசியமானவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே. சிலர் இவற்றினூடே, தங்களது உயர்ந்த கருத்துக்களையும், அல்லது நல்ல சிந்தனைகளுக்கு வித்திடுகின்ற விஷயங்களையும் எழுதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.
எனக்கு அவ்வாறு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சரி, அப்படி எதைத்தான் எழுதப் போகிறேன் என்றால், அதையும் இன்னும் முடிவு செய்யவில்லை. அதுதான் ஏன் எழுத வேண்டுமென்ற கேள்வியில் நிற்கிறேனே? மறுபடியும் அந்தக் கேள்விக்குப் போவோம்.
இப்போது எனது அறிவுக்கு எட்டிய விஷயங்கள் இரண்டு.
1. உலகத்தைத் திருத்த வேண்டுமென்று எழுத வேண்டியதில்லை. ஏனெனில், எனது கருத்து தவறென்று நாளை எனக்கு உதயமாகலாம்.
2. அங்கீகாரத்திற்காக எழுத வேண்டிய அவசியமுமில்லை. அதே காரணம்.
கண்டு பிடிப்போம்...
Saturday, March 13, 2004
என்ன எழுத?
ஆக நானும் வலைப்பூ ஒன்றை என் பெயரில் தொடங்கிக் கொண்டு விட்டேன். இனி, இதில் என்ன எழுதுவது? இந்தக் கேள்விக்குப் பதிலை மிகவும் சீரியஸாக யோசிக்கத் தொடங்கியதால்தான், சென்ற முறை இதைத் தொடராமல் விட்டு விட்டேன்.
இன்று வலைப்பூக்களில் உலவிக் கொண்டிருந்தபோது, அவற்றின் உள்ளடக்கம் குறித்த விவாதம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். அதை அடிப்படையாக வைத்துக்கொள்ளுமளவு உள்ளடக்கம் இன்னும் என்னிடம் இல்லை. எனவே எழுதத் தொடங்குவோம். அதன்பின் தானாக ஒரு வரையறை ஏற்பட்டு விடும் என்று எண்ணுகிறேன்.
ஆக, என்ன எழுதுவது என்ற கேள்வியைத் தந்திரமாக ஒத்திப் போட்டாயிற்று. இதனினும் பெரிய கேள்வி ஒன்று என்னை அடிக்கடி உறுத்துவதுண்டு. அது, 'ஏன் எழுத வேண்டும்' என்பது. நான் எழுதுவது எல்லாம் சுய தம்பட்டமாக ('டப்பா' அடிப்பதாக) முடிந்து விடுகிறதோ என்று ஒரு பயமும் உண்டு. ('இவன் என்ன நிறைய எழுதியதைப் போலப் பேசுகிறானே' என்றெண்ண வேண்டாம். யாருக்கும் தெரியாமல் நிறைய எழுதியிருக்கிறேனாக்கும்) அதையும் மீறி, ஒரு ஒழுங்கான சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்து, எழுதுவதற்காகவென்றே சிந்தனை செய்ய வேண்டிய நிலை வருவதையும் எண்ணி அருவருப்புடன் பயப்பட வேண்டியிருக்கிறது. அது போக, எழுதுவது பொழுதுபோக்கு என்றொரு நிலையும் வராதிருக்க வேண்டும். முனிவர் வீட்டில் பூனை, பசு, வேலைக்காரி, மனைவி, குழந்தை என்று சேர்ந்ததொரு கதையைப் போல, இந்த வலைப்பூ, அதன் பராமரிப்பு எல்லாம் தொல்லையாகி விடுமோ அல்லது மயக்கம் தரும் விஷயமாகி விடுமோ என்றொரு தயக்கமும் உண்டு.
எனவே நான் எழுதுவது பொழுதுபோக்கன்று; எழுத வேண்டும் என்பதற்காகவுமன்று; எதையோ தேடுவதான பயணத்தில், இளைப்பாறும் வசதி கிடைக்கும் நேரத்தில் அசை போடுவதற்காகவும், மேலும் உள் நோக்கியதான பயணத்திற்கு உதவி புரியும் முகமாகவும் மட்டுமே.
தேடப்படும் பொருள் என்னவென்று ஏற்கனவே சொல்லி விட்டேன். அதை மீண்டும் மீண்டும் சொல்லி அந்த வார்த்தைக்கான முக்கியத்துவத்தைக் கூட்ட விரும்பவில்லை. வார்த்தைகளை அவற்றிற்குரிய இடத்தில் வைப்போம். அதையும் தாண்டியதே எனது தேடல்.
இன்று வலைப்பூக்களில் உலவிக் கொண்டிருந்தபோது, அவற்றின் உள்ளடக்கம் குறித்த விவாதம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். அதை அடிப்படையாக வைத்துக்கொள்ளுமளவு உள்ளடக்கம் இன்னும் என்னிடம் இல்லை. எனவே எழுதத் தொடங்குவோம். அதன்பின் தானாக ஒரு வரையறை ஏற்பட்டு விடும் என்று எண்ணுகிறேன்.
ஆக, என்ன எழுதுவது என்ற கேள்வியைத் தந்திரமாக ஒத்திப் போட்டாயிற்று. இதனினும் பெரிய கேள்வி ஒன்று என்னை அடிக்கடி உறுத்துவதுண்டு. அது, 'ஏன் எழுத வேண்டும்' என்பது. நான் எழுதுவது எல்லாம் சுய தம்பட்டமாக ('டப்பா' அடிப்பதாக) முடிந்து விடுகிறதோ என்று ஒரு பயமும் உண்டு. ('இவன் என்ன நிறைய எழுதியதைப் போலப் பேசுகிறானே' என்றெண்ண வேண்டாம். யாருக்கும் தெரியாமல் நிறைய எழுதியிருக்கிறேனாக்கும்) அதையும் மீறி, ஒரு ஒழுங்கான சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்து, எழுதுவதற்காகவென்றே சிந்தனை செய்ய வேண்டிய நிலை வருவதையும் எண்ணி அருவருப்புடன் பயப்பட வேண்டியிருக்கிறது. அது போக, எழுதுவது பொழுதுபோக்கு என்றொரு நிலையும் வராதிருக்க வேண்டும். முனிவர் வீட்டில் பூனை, பசு, வேலைக்காரி, மனைவி, குழந்தை என்று சேர்ந்ததொரு கதையைப் போல, இந்த வலைப்பூ, அதன் பராமரிப்பு எல்லாம் தொல்லையாகி விடுமோ அல்லது மயக்கம் தரும் விஷயமாகி விடுமோ என்றொரு தயக்கமும் உண்டு.
எனவே நான் எழுதுவது பொழுதுபோக்கன்று; எழுத வேண்டும் என்பதற்காகவுமன்று; எதையோ தேடுவதான பயணத்தில், இளைப்பாறும் வசதி கிடைக்கும் நேரத்தில் அசை போடுவதற்காகவும், மேலும் உள் நோக்கியதான பயணத்திற்கு உதவி புரியும் முகமாகவும் மட்டுமே.
தேடப்படும் பொருள் என்னவென்று ஏற்கனவே சொல்லி விட்டேன். அதை மீண்டும் மீண்டும் சொல்லி அந்த வார்த்தைக்கான முக்கியத்துவத்தைக் கூட்ட விரும்பவில்லை. வார்த்தைகளை அவற்றிற்குரிய இடத்தில் வைப்போம். அதையும் தாண்டியதே எனது தேடல்.
Subscribe to:
Posts (Atom)
