Wednesday, November 14, 2007

வீர வணக்கம்!

உணர்வொன்றும் மரத்து விடவில்லை, உறவை மறந்து விட
அறிவின்னும் அழிந்திடவில்லை, உண்மை உணராதிருக்க
இதயம் ஒன்றும் கல்லன்று, ஈழத்தமிழர் நிலை கண்டும் காணாதிருக்க.

என் அலுவலக அறைப் பலகையில்...


Tuesday, November 06, 2007

இந்த முறையும்

சாலையோரக் கற்சுவரில்
பாசி பூத்திருக்கும் மழைக்காலம்.
நம்மில் உற்சாகம் போல
காற்றில் ஈரம் அடர்ந்திருந்தது.
நாம் நடந்து கடந்தோம்
தோப்புகளையும், வயல்களையும்,
வண்ணத்துப் பூச்சிகள் போல.
மரியாதை கருதியல்ல
மகிழ்வால் புன்னகைத்தோம்
அது நமது மொழியாயிருந்தது.
உன் அருகாமையோ
இதயத் துடிப்பை ஒன்றும் செய்யாத
இயல்பாயிருந்தது.
உயர எறிந்த இலவம்பூ
சுழன்று விழும் அழகு கண்டு
அதிசயித்துக் குதூகலித்தாய் நீ.
கனவுதான் என்றாலும்
உன்முகப் பரவசம் காண
செய்ய இயலாததொன்றுண்டோ
தேடிச் சலித்தேன் நான்.