Saturday, December 08, 2007
மூத்திரக் கடுப்பும், சிரிப்பு போலீசும்
நடிகை குஷ்பூ அவங்க கால் மேல கால் போட்டா, இந்து முன்னணிக் காரய்ங்களுக்கு மூத்திரக் கடுப்பு வருதாம். நமக்கு மூத்திரக் கடுப்பு வந்தா கொல்லைக்குப் போவோம், இவிங்க கோர்ட்டுக்குப் போறாய்ங்க. இனி ஒவ்வொரு நீதிபதியும் எங்க கோர்ட்டுக்கு வாங்க, எங்க கோர்ட்டுக்கு வாங்கன்னு குஷ்பூவுக்கு இன்விடேஷன் அனுப்புவாய்ங்க. என்ன எழவுய்யா நடக்குது தமிழ்நாட்டுல?
Wednesday, November 14, 2007
வீர வணக்கம்!
Tuesday, November 06, 2007
இந்த முறையும்
சாலையோரக் கற்சுவரில்
பாசி பூத்திருக்கும் மழைக்காலம்.
நம்மில் உற்சாகம் போல
காற்றில் ஈரம் அடர்ந்திருந்தது.
நாம் நடந்து கடந்தோம்
தோப்புகளையும், வயல்களையும்,
வண்ணத்துப் பூச்சிகள் போல.
மரியாதை கருதியல்ல
மகிழ்வால் புன்னகைத்தோம்
அது நமது மொழியாயிருந்தது.
உன் அருகாமையோ
இதயத் துடிப்பை ஒன்றும் செய்யாத
இயல்பாயிருந்தது.
உயர எறிந்த இலவம்பூ
சுழன்று விழும் அழகு கண்டு
அதிசயித்துக் குதூகலித்தாய் நீ.
கனவுதான் என்றாலும்
உன்முகப் பரவசம் காண
செய்ய இயலாததொன்றுண்டோ
தேடிச் சலித்தேன் நான்.
பாசி பூத்திருக்கும் மழைக்காலம்.
நம்மில் உற்சாகம் போல
காற்றில் ஈரம் அடர்ந்திருந்தது.
நாம் நடந்து கடந்தோம்
தோப்புகளையும், வயல்களையும்,
வண்ணத்துப் பூச்சிகள் போல.
மரியாதை கருதியல்ல
மகிழ்வால் புன்னகைத்தோம்
அது நமது மொழியாயிருந்தது.
உன் அருகாமையோ
இதயத் துடிப்பை ஒன்றும் செய்யாத
இயல்பாயிருந்தது.
உயர எறிந்த இலவம்பூ
சுழன்று விழும் அழகு கண்டு
அதிசயித்துக் குதூகலித்தாய் நீ.
கனவுதான் என்றாலும்
உன்முகப் பரவசம் காண
செய்ய இயலாததொன்றுண்டோ
தேடிச் சலித்தேன் நான்.
Sunday, May 06, 2007
அழகே அழகு
ரொம்ப நாளாச்சு இங்க ஏதும் எழுதி. வேலை நிறைய; படிக்கணும்னு வாங்கி வச்ச புத்தகங்கள் நிறைய. தமிழ்மணம். கீற்று எல்லாம் படிக்கறதுக்கே நேரத்தைப் பொறுக்கிச் சேர்க்க வேண்டியிருக்கு. அப்படியே ராசா பக்கம் போய்ப் பார்த்தா, ஏறக்குறைய மூணு வாரத்துக்கு முன்னாடி 'அழகே அழகு'ன்னு உருகியிருக்கார். அதோட விட்டாரா, என்னையும் அதுல இழுத்து விட்டிருக்கார். என்னையும் ஞாபகம் வச்சிருக்கார்ங்கறதுல ரொம்ப மகிழ்ச்சி!
சரின்னுட்டு, நம்ம கண்ணுக்கு எதெல்லாம் அழகுன்னு யோசிக்கப் போனா, சிலது தேறிச்சு. அதை எழுதறக்கு முன்னால, ராசாவை இந்த விளையாட்ல கூப்பிட்ட அனு எதை அழகுன்றாங்கன்னு பாக்கப் போனேன். நம்ம பட்டியல்ல வர்றது எல்லாம் அங்கயும் இருக்கு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைக்காம, அப்படியே இங்க எழுதிருக்கேன்!
ரெண்டு வாரம் முன்னாடி என் நண்பரோட பொண்ணு நந்தனாவோட ரெண்டாவது பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தேன். அங்க வந்திருந்த குழந்தைகள், அவங்க விளையாட்டு எல்லாம் பாத்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு நண்பர்ட்ட சொன்னேன். 'சென்னைக்குப் போயிடலாமான்னு வர்ற எண்ணத்தை மாத்த எனக்குத் தெரியிற ஒரே காரணம் இந்தக் குழந்தைகள்தான்'னு. சென்னையில் குழந்தைகள் இல்லன்னு அர்த்தமில்ல. ஆனா, இங்க பழகின குழந்தைகளை எல்லாம் பாக்க முடியாமப் போயிடுமேன்னுதான். ஆக, அழகுன்னு நினைச்சா முதலில் வர்றது குழந்தைகள்தான். 2002-ல வாடகை வீடு பாக்க சாவி கேட்டுக் கீழ் வீட்டுக் கதவைத் தட்டும்போது திறந்த ரெண்டு குழந்தைகள் கிருத்திகாவும், உத்ராவும், அதே கட்டடத்துல இருந்த காவ்யாவும், மனிஷாவும், பக்கத்து வீட்ல இருந்த மேக்னா, இப்போ நண்பர்கள் வித்யா - சாகர் தம்பதியின் குழந்தை நந்தனா, இப்போ மேல் வீட்ல இருக்கிற தெலுங்குக் குடும்பத்துல என்னைப் பாத்து (அல்லது என் தாடியைப் பாத்து) ஏனோ பயப்படுற குழந்தை அப்படின்னு நீளும் பட்டியல். இவங்க மட்டுமில்ல, கடைல, தெருவில அப்படின்னு பல இடங்களிலும் பாக்கிற குழந்தைகள், எந்தவொரு சூழ்நிலையையும் மறக்கடிச்சு என்னையும் குழந்தையா மாத்திடுறதால, அதுதான் பேரழகு.
அப்புறம், யாரையும் அழகாக்கக் கூடிய சக்தி கொண்ட புன்னகை அழகு. அதுவே, குழந்தைகளின் புன்னகை, ஆகா அதுதான் சொர்க்கம்.
2002-ல பிடிச்ச வாடகை வீடுன்றது ஒரு சின்ன அறை, மூணாவது மாடில. இடுப்புல துண்டை மட்டும் கட்டிக்கிட்டு, ஆடி, குதிச்சு, வானம் பார்த்துத் தரையில படுத்துக்கிட்டு, உடம்பு மேல பட படன்னு பலமாவோ, சின்ன சின்ன ஊசி மாதிரி வேகமாவோ, அல்லது வெறும் தூறலாவோ வந்து தழுவுற மழையை அனுபவிச்சதுண்டு. அந்த மழை அழகு.
மழை நின்னப்புறம், தெருவில இறங்கி நடந்துகிட்டே ரோட்டோரம் இருக்கிற மரங்களோட தாழ்ந்த கிளையில இருக்கிற இலைகளை அசைச்சு அந்தத் தூறலில் சிலிர்த்ததுண்டு. பக்தி தலைக்கேறிய காலத்துல கோவில் மணியடிச்சப்போ வந்த உணர்ச்சி, சிலிர்ப்பெல்லாம் கூட கிட்ட வர முடியாதுன்னு தோணுது. மழை இல்லைன்னாலும், இந்த மரங்கள், செடிகளை அப்பப்போ தொட்டுக்கிட்டு, தடவிக் கொடுத்துக்கிட்டு நடக்கறது வழக்கமாயிடுச்சு. நம்ம கண்ணுக்கு அழகா இருக்கணுமேங்கறதுக்காக வெட்டுப்பட்டு நிக்கிற செடிகளைக் கண்டா கண்ணீர் வர்றது மட்டும்தான் குறை. இந்த மரங்கள், கிளைகள், இலைகள், மலர்கள் எல்லாம் அழகு.
அலுவலக வளாகத்துலயும், பூங்காக்கள்லயும், ஒண்ணா உக்காந்துக்கிட்டு, கண்களால பேசிக்கிட்டு, பொய்க்கோபம் காட்டிக்கிட்டு, அன்பையோ ஆறுதலையோ வண்டி வண்டியாக் கொட்டும் கண்களோட பாத்துட்டிருக்கிற ஜோடிகள் அழகு.
பெண்கள் அழகு; மீட்டிங்-ல உக்காந்துக்கிட்டு நான் கிறுக்கிற ஓவியங்கள் அழகு; கன்னட எழுத்துக்கள் அழகு, அதிலயும் வீணை வடிவத்துல இருக்கிற சில எழுத்துக்கள் இன்னும் அழகு; பேருந்தில உக்காந்துக்கிட்டிருக்கும்போது திடீர்னு கேட்கிற பெண்-தமிழ்க் குரல்கள் அழகு.
தமிழ் அழகு. இசை அழகு. இசை, நாட்டியம் அழகு. எல்லாத்துலயும் ஒளிஞ்சிருக்கிற தாள லயம் அழகு. கவிதை அழகு. நியாமான கோபம் பேரழகு. சாந்தமும் அழகு.
காதல் அழகு, நினைவுகள் அழகு. என்ன சொல்ல, வலிகளும் அழகு.
பழைய கோயில்கள் அழகு; பக்தி அழகு; உறவுகள் அழகு; உறவொண்ணும் இல்லைன்னாலும், மனசு கனிஞ்சு வர்ற அன்பு அழகு;
மழையை ரசிச்சு நடக்கும்போது, ஒழுகுற குடிசை வீட்டைப் பாத்தவுடனே, பாடிக்கிட்டிருந்த 'சின்னச் சின்ன மழைத் துளிகள்' பாட்டை நிறுத்த வச்சு, உள்ள அழுற குழந்தையோட சேர்ந்து மனசை அழ வச்சு, மழையோட சேர்ந்து கண்ணீரை ஓட வைக்கிற மனசாட்சி அழகு.
'கூரையின் ஓட்டை வழி நட்சத்திரம்' பாட்டு அழகை ரசிக்கும்போதே, வலிக்கிற மனசு அழகு. தன்கிட்ட இருக்கிற அழுக்கை எல்லாம் உடனே பாத்துக்கிற மனசு பேரழகு. அதுக்கு வழி செஞ்ச அறிவு இன்னும் அழகு. ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்து அடிக்கிற குழப்பமும் அழகு. அது முடிஞ்சு வர்ற தெளிவும், அதுக்குள்ள இருக்கும் குழப்பங்களும் அழகு. அந்தக் குழப்பங்களை அப்போதைக்காச்சும் மறக்கடிக்கிறது குழந்தையோ, மழையோ, உறவோ, அன்போ, இசையோ எதுன்னாலும் அது அழகு.
சரின்னுட்டு, நம்ம கண்ணுக்கு எதெல்லாம் அழகுன்னு யோசிக்கப் போனா, சிலது தேறிச்சு. அதை எழுதறக்கு முன்னால, ராசாவை இந்த விளையாட்ல கூப்பிட்ட அனு எதை அழகுன்றாங்கன்னு பாக்கப் போனேன். நம்ம பட்டியல்ல வர்றது எல்லாம் அங்கயும் இருக்கு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைக்காம, அப்படியே இங்க எழுதிருக்கேன்!
ரெண்டு வாரம் முன்னாடி என் நண்பரோட பொண்ணு நந்தனாவோட ரெண்டாவது பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தேன். அங்க வந்திருந்த குழந்தைகள், அவங்க விளையாட்டு எல்லாம் பாத்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு நண்பர்ட்ட சொன்னேன். 'சென்னைக்குப் போயிடலாமான்னு வர்ற எண்ணத்தை மாத்த எனக்குத் தெரியிற ஒரே காரணம் இந்தக் குழந்தைகள்தான்'னு. சென்னையில் குழந்தைகள் இல்லன்னு அர்த்தமில்ல. ஆனா, இங்க பழகின குழந்தைகளை எல்லாம் பாக்க முடியாமப் போயிடுமேன்னுதான். ஆக, அழகுன்னு நினைச்சா முதலில் வர்றது குழந்தைகள்தான். 2002-ல வாடகை வீடு பாக்க சாவி கேட்டுக் கீழ் வீட்டுக் கதவைத் தட்டும்போது திறந்த ரெண்டு குழந்தைகள் கிருத்திகாவும், உத்ராவும், அதே கட்டடத்துல இருந்த காவ்யாவும், மனிஷாவும், பக்கத்து வீட்ல இருந்த மேக்னா, இப்போ நண்பர்கள் வித்யா - சாகர் தம்பதியின் குழந்தை நந்தனா, இப்போ மேல் வீட்ல இருக்கிற தெலுங்குக் குடும்பத்துல என்னைப் பாத்து (அல்லது என் தாடியைப் பாத்து) ஏனோ பயப்படுற குழந்தை அப்படின்னு நீளும் பட்டியல். இவங்க மட்டுமில்ல, கடைல, தெருவில அப்படின்னு பல இடங்களிலும் பாக்கிற குழந்தைகள், எந்தவொரு சூழ்நிலையையும் மறக்கடிச்சு என்னையும் குழந்தையா மாத்திடுறதால, அதுதான் பேரழகு.
அப்புறம், யாரையும் அழகாக்கக் கூடிய சக்தி கொண்ட புன்னகை அழகு. அதுவே, குழந்தைகளின் புன்னகை, ஆகா அதுதான் சொர்க்கம்.
2002-ல பிடிச்ச வாடகை வீடுன்றது ஒரு சின்ன அறை, மூணாவது மாடில. இடுப்புல துண்டை மட்டும் கட்டிக்கிட்டு, ஆடி, குதிச்சு, வானம் பார்த்துத் தரையில படுத்துக்கிட்டு, உடம்பு மேல பட படன்னு பலமாவோ, சின்ன சின்ன ஊசி மாதிரி வேகமாவோ, அல்லது வெறும் தூறலாவோ வந்து தழுவுற மழையை அனுபவிச்சதுண்டு. அந்த மழை அழகு.
மழை நின்னப்புறம், தெருவில இறங்கி நடந்துகிட்டே ரோட்டோரம் இருக்கிற மரங்களோட தாழ்ந்த கிளையில இருக்கிற இலைகளை அசைச்சு அந்தத் தூறலில் சிலிர்த்ததுண்டு. பக்தி தலைக்கேறிய காலத்துல கோவில் மணியடிச்சப்போ வந்த உணர்ச்சி, சிலிர்ப்பெல்லாம் கூட கிட்ட வர முடியாதுன்னு தோணுது. மழை இல்லைன்னாலும், இந்த மரங்கள், செடிகளை அப்பப்போ தொட்டுக்கிட்டு, தடவிக் கொடுத்துக்கிட்டு நடக்கறது வழக்கமாயிடுச்சு. நம்ம கண்ணுக்கு அழகா இருக்கணுமேங்கறதுக்காக வெட்டுப்பட்டு நிக்கிற செடிகளைக் கண்டா கண்ணீர் வர்றது மட்டும்தான் குறை. இந்த மரங்கள், கிளைகள், இலைகள், மலர்கள் எல்லாம் அழகு.
அலுவலக வளாகத்துலயும், பூங்காக்கள்லயும், ஒண்ணா உக்காந்துக்கிட்டு, கண்களால பேசிக்கிட்டு, பொய்க்கோபம் காட்டிக்கிட்டு, அன்பையோ ஆறுதலையோ வண்டி வண்டியாக் கொட்டும் கண்களோட பாத்துட்டிருக்கிற ஜோடிகள் அழகு.
பெண்கள் அழகு; மீட்டிங்-ல உக்காந்துக்கிட்டு நான் கிறுக்கிற ஓவியங்கள் அழகு; கன்னட எழுத்துக்கள் அழகு, அதிலயும் வீணை வடிவத்துல இருக்கிற சில எழுத்துக்கள் இன்னும் அழகு; பேருந்தில உக்காந்துக்கிட்டிருக்கும்போது திடீர்னு கேட்கிற பெண்-தமிழ்க் குரல்கள் அழகு.
தமிழ் அழகு. இசை அழகு. இசை, நாட்டியம் அழகு. எல்லாத்துலயும் ஒளிஞ்சிருக்கிற தாள லயம் அழகு. கவிதை அழகு. நியாமான கோபம் பேரழகு. சாந்தமும் அழகு.
காதல் அழகு, நினைவுகள் அழகு. என்ன சொல்ல, வலிகளும் அழகு.
பழைய கோயில்கள் அழகு; பக்தி அழகு; உறவுகள் அழகு; உறவொண்ணும் இல்லைன்னாலும், மனசு கனிஞ்சு வர்ற அன்பு அழகு;
மழையை ரசிச்சு நடக்கும்போது, ஒழுகுற குடிசை வீட்டைப் பாத்தவுடனே, பாடிக்கிட்டிருந்த 'சின்னச் சின்ன மழைத் துளிகள்' பாட்டை நிறுத்த வச்சு, உள்ள அழுற குழந்தையோட சேர்ந்து மனசை அழ வச்சு, மழையோட சேர்ந்து கண்ணீரை ஓட வைக்கிற மனசாட்சி அழகு.
'கூரையின் ஓட்டை வழி நட்சத்திரம்' பாட்டு அழகை ரசிக்கும்போதே, வலிக்கிற மனசு அழகு. தன்கிட்ட இருக்கிற அழுக்கை எல்லாம் உடனே பாத்துக்கிற மனசு பேரழகு. அதுக்கு வழி செஞ்ச அறிவு இன்னும் அழகு. ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்து அடிக்கிற குழப்பமும் அழகு. அது முடிஞ்சு வர்ற தெளிவும், அதுக்குள்ள இருக்கும் குழப்பங்களும் அழகு. அந்தக் குழப்பங்களை அப்போதைக்காச்சும் மறக்கடிக்கிறது குழந்தையோ, மழையோ, உறவோ, அன்போ, இசையோ எதுன்னாலும் அது அழகு.
Labels:
அழகு,
சங்கிலிப் பதிவு,
சொந்தக்கதை
Saturday, April 07, 2007
பார்வையாளனின் துயரம்
அந்தச் சக பயணி, தன்னை ஒரு பார்வையாளன் என்று கூறிக் கொண்டான்.
'கடைசி வரை வெறும் பார்வையாளனாகவே இருந்து விடுவதாக உத்தேசமோ?' என் கேள்விக்கு ஒற்றைச் சொல்லில் பதில் வந்த பிறகுதான், நான் அதை எதிர் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன்.
பார்க்கலாம்.
இப்போது என்னதான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?
நான் பார்ப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு தேடிக்கொண்டிருக்கின்றேனோ என்று.
என்று?
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அலுத்துப் போகவில்லை?
களைத்தும் போவதுண்டு.
மகிழ்ச்சியை உணர்ந்ததுண்டா?
மகிழ்ச்சியென்று காணும் வரை, உணர்ந்ததுண்டு.
துயரமொன்றும் இருக்காதே!?
உனக்குத் தெரியாது. பார்வையாளனின் துயரம். கொடிது, பெரிது, நெடிது...
ஆகா... அவரவர் துயரம்!
சரிதான். இந்தப் புன்னைகையோடு நிறுத்திக்கொள், நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உன் வாழ்வைத் தொடர விரும்பினால்.
உற்றுப்பார்த்தேன் அவனை.
திடீரென்று மறைந்திருந்தானென்றால், எவ்வளவு சுவாரசியமாய் இருந்திருக்கும்! அதுதான் வேண்டாம், கொஞ்சம் உணர்ச்சியையாவது முகத்தில் காட்டக் கூடாதா?
அவனோ, என்னைத் திரும்ப உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'கடைசி வரை வெறும் பார்வையாளனாகவே இருந்து விடுவதாக உத்தேசமோ?' என் கேள்விக்கு ஒற்றைச் சொல்லில் பதில் வந்த பிறகுதான், நான் அதை எதிர் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன்.
பார்க்கலாம்.
இப்போது என்னதான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?
நான் பார்ப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு தேடிக்கொண்டிருக்கின்றேனோ என்று.
என்று?
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அலுத்துப் போகவில்லை?
களைத்தும் போவதுண்டு.
மகிழ்ச்சியை உணர்ந்ததுண்டா?
மகிழ்ச்சியென்று காணும் வரை, உணர்ந்ததுண்டு.
துயரமொன்றும் இருக்காதே!?
உனக்குத் தெரியாது. பார்வையாளனின் துயரம். கொடிது, பெரிது, நெடிது...
ஆகா... அவரவர் துயரம்!
சரிதான். இந்தப் புன்னைகையோடு நிறுத்திக்கொள், நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உன் வாழ்வைத் தொடர விரும்பினால்.
உற்றுப்பார்த்தேன் அவனை.
திடீரென்று மறைந்திருந்தானென்றால், எவ்வளவு சுவாரசியமாய் இருந்திருக்கும்! அதுதான் வேண்டாம், கொஞ்சம் உணர்ச்சியையாவது முகத்தில் காட்டக் கூடாதா?
அவனோ, என்னைத் திரும்ப உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
விமான நிலையத்தில் நுழைந்தபோது...
ஆசையுடன் வளர்த்த தாடி
திடீரென்று அந்நியமாயிற்று.
உலகின் சந்தோஷத்தில்
பங்கு பெற மறுக்கும் என் பிடிவாதம்
எனக்கே குமட்டிற்று.
'உப்பு கொஞ்சம் தூக்கல்'
ஒப்புக்குக் குறைசொல்லும்
நாத்தனார் குரலாய்,
என் முகத்தில்
இன்னும் அப்பியிருக்கிறது
முப்பது நாள் தாடி.
திடீரென்று அந்நியமாயிற்று.
உலகின் சந்தோஷத்தில்
பங்கு பெற மறுக்கும் என் பிடிவாதம்
எனக்கே குமட்டிற்று.
'உப்பு கொஞ்சம் தூக்கல்'
ஒப்புக்குக் குறைசொல்லும்
நாத்தனார் குரலாய்,
என் முகத்தில்
இன்னும் அப்பியிருக்கிறது
முப்பது நாள் தாடி.
Friday, February 16, 2007
தினமலர் - ஐகோர்ட்
நீதிமன்றம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளபோதும், அதைப் பயன்படுத்தக்கூடாது என்று அப்படியென்ன உறுதி தினமலருக்கு? மற்ற எல்லா செய்தித்தாள்களும் நீதிமன்றம் என்று எழுதும்போது தினமலர் மட்டும் கோர்ட் என்ற எழுதும் காரணம் என்ன?
அதுவும் போக, தமிழக அரசு, தமிழில் வெளியிடும் அறிக்கையில் உள்ள நீதிமன்றம் என்ற சொல்லையும், கோர்ட் என்று மொழிபெயர்த்து ஒரு தமிழ்ச் செய்தித்தாளில் அச்சிட வேண்டிய அவசியம் என்ன?
'ஐ'கோர்ட் என்று சொல்லும்போது ஆங்கில அறிஞர்களின் அழகுணர்ச்சி அடிபடுவதன் வலியுணர்ந்து கொள்ளுமா தினமலர்?
அதுவும் போக, தமிழக அரசு, தமிழில் வெளியிடும் அறிக்கையில் உள்ள நீதிமன்றம் என்ற சொல்லையும், கோர்ட் என்று மொழிபெயர்த்து ஒரு தமிழ்ச் செய்தித்தாளில் அச்சிட வேண்டிய அவசியம் என்ன?
'ஐ'கோர்ட் என்று சொல்லும்போது ஆங்கில அறிஞர்களின் அழகுணர்ச்சி அடிபடுவதன் வலியுணர்ந்து கொள்ளுமா தினமலர்?
Tuesday, February 13, 2007
காதலிலே என்ன ஆச்சு?
( ம்ம்.. என்னென்னமோ ஆச்சு... :)
நேற்றுவரை வைத்திருந்த கொள்கையெல்லாம் துச்சமாச்சு - உன்
வேல்விழியில் விழுவதுவே பிறந்தபயன் என்றாச்சு!
நீநடந்த பாதையெல்லாம் என்பள்ளிக் கூடமாச்சு - என்
நாநடக்கும் ஒருபாதை உன்பேர்தான் என்றாச்சு!
நண்பர்கள் கூட்டத்தை நான் மறந்து நாளாச்சு - என்
அன்பும் ஆசையும் உனைக்கண்டு ஆளாச்சு!
அதிகாலை எழுப்புகிற மணிஉந்தன் நினைவாச்சு - தினம்
எனைத்தூங்க வைக்கின்ற தாலாட்டும் அதுவாச்சு!
நாள்முழுதும் உன்நினைவே நெஞ்சுக்குள் ஓடலாச்சு - நான்
தூங்குகின்ற சிலபொழுதும் உன்கனவில் நிறைஞ்சாச்சு!
காண்பதெல்லாம் உன்நினைவைத் தூண்டுகின்ற தோதாச்சு - உனைக்
காணாத நாளெல்லாம் பூவிழந்த நாராச்சு!
எதிர்காலம் என்னவென்ற குழப்பமது தீர்ந்தாச்சு - நாம்
மகிழ்வோடு வாழ்வதுதான் வாழ்வென்று ஓர்ந்தாச்சு!
காவிகட்ட நினைச்சிருந்த காலமெல்லாம் போயாச்சு - என்
ஆவியுடன் அத்தனையும் உனக்கென்று ஆயாச்சு!
என்வழி எனக்கென்ற அகங்காரம் தீர்ந்தாச்சு - இனி
உன்வழியில் துணையாக வருவதென்று தீர்வாச்சு!
ஊருலகம் உற்றார்கள் சொல்வதெல்லாம் தூசாச்சு - உன்
பார்வையிடும் பணியொன்றே என்வாழ்வில் பெரிதாச்சு!
உனதாசை நிறைவேற்ற உண்டானது நானாச்சு - இனி
எனக்கான தென்றிங்கு ஓருயிரும் நீயாச்சு!
பழங்காலம் சொல்லிவைத்த சாதிமதப் பொய்ப்பூச்சு - அதைப்
பொய்யாக்கி ஒன்றாக ஒலிக்கட்டும் நம்மூச்சு!
நேற்றுவரை வைத்திருந்த கொள்கையெல்லாம் துச்சமாச்சு - உன்
வேல்விழியில் விழுவதுவே பிறந்தபயன் என்றாச்சு!
நீநடந்த பாதையெல்லாம் என்பள்ளிக் கூடமாச்சு - என்
நாநடக்கும் ஒருபாதை உன்பேர்தான் என்றாச்சு!
நண்பர்கள் கூட்டத்தை நான் மறந்து நாளாச்சு - என்
அன்பும் ஆசையும் உனைக்கண்டு ஆளாச்சு!
அதிகாலை எழுப்புகிற மணிஉந்தன் நினைவாச்சு - தினம்
எனைத்தூங்க வைக்கின்ற தாலாட்டும் அதுவாச்சு!
நாள்முழுதும் உன்நினைவே நெஞ்சுக்குள் ஓடலாச்சு - நான்
தூங்குகின்ற சிலபொழுதும் உன்கனவில் நிறைஞ்சாச்சு!
காண்பதெல்லாம் உன்நினைவைத் தூண்டுகின்ற தோதாச்சு - உனைக்
காணாத நாளெல்லாம் பூவிழந்த நாராச்சு!
எதிர்காலம் என்னவென்ற குழப்பமது தீர்ந்தாச்சு - நாம்
மகிழ்வோடு வாழ்வதுதான் வாழ்வென்று ஓர்ந்தாச்சு!
காவிகட்ட நினைச்சிருந்த காலமெல்லாம் போயாச்சு - என்
ஆவியுடன் அத்தனையும் உனக்கென்று ஆயாச்சு!
என்வழி எனக்கென்ற அகங்காரம் தீர்ந்தாச்சு - இனி
உன்வழியில் துணையாக வருவதென்று தீர்வாச்சு!
ஊருலகம் உற்றார்கள் சொல்வதெல்லாம் தூசாச்சு - உன்
பார்வையிடும் பணியொன்றே என்வாழ்வில் பெரிதாச்சு!
உனதாசை நிறைவேற்ற உண்டானது நானாச்சு - இனி
எனக்கான தென்றிங்கு ஓருயிரும் நீயாச்சு!
பழங்காலம் சொல்லிவைத்த சாதிமதப் பொய்ப்பூச்சு - அதைப்
பொய்யாக்கி ஒன்றாக ஒலிக்கட்டும் நம்மூச்சு!
காதல் - ஒரு தலைப்பில் பல கவிதை
(காதலர் தினத்தை முன்னிட்டு...)
*********************
தயங்கி நகரும்
நத்தையின் மேல்
இல்லையென்ற ஒற்றைச் சொல்லாய்
வண்டிச் சக்கரம்
ஏறி நசுக்கிற்று.
எத்தனை முறை
வெளியேற்றினாலும்
குட்டிகளை மீண்டும்
ஒளித்துக் கொணர்ந்து
குடியுரிமை கேட்டுக் கொண்டுதானிருக்கிறது,
வீட்டுப் பூனை.
தவறில்லை
தாய்ப்பாசம்
மட்டும்தானா?
*********************
மறக்கச் சொல்கிறார்கள்!
மறக்கத்தான் வேண்டும்
இயன்றால்,
இறக்கும்போதேனும்!
*********************
நிலை மறந்து செயல் மறந்து நிலவுக்கும் போய் வரலாம்
கலையுடனே காவியங்கள் செழிப்புற்றே வளர்ந்திடலாம்
துணையொன்றின் துயர் தீர்க்க உயிர் தரவும் தூண்டிடலாம்
காதலினால் காலமெலாம் மகிழ்வுற்றே நீண்டிடலாம்!
பதில் வராத கடிதங்கள் பைத்தியமாய் ஆக்கிடலாம்
பதின்வயதுக் குழப்பங்கள் நிலைதழும்பாய் மாறிடலாம்
கழிவிரக்கப் புலம்பல்கள் கவிதையென்று பேர்பெறலாம்
காதலினால் பலவிதைகள் பாறையிலும் காய்ந்திடலாம்!
*********************
*********************
தயங்கி நகரும்
நத்தையின் மேல்
இல்லையென்ற ஒற்றைச் சொல்லாய்
வண்டிச் சக்கரம்
ஏறி நசுக்கிற்று.
எத்தனை முறை
வெளியேற்றினாலும்
குட்டிகளை மீண்டும்
ஒளித்துக் கொணர்ந்து
குடியுரிமை கேட்டுக் கொண்டுதானிருக்கிறது,
வீட்டுப் பூனை.
தவறில்லை
தாய்ப்பாசம்
மட்டும்தானா?
*********************
மறக்கச் சொல்கிறார்கள்!
மறக்கத்தான் வேண்டும்
இயன்றால்,
இறக்கும்போதேனும்!
*********************
நிலை மறந்து செயல் மறந்து நிலவுக்கும் போய் வரலாம்
கலையுடனே காவியங்கள் செழிப்புற்றே வளர்ந்திடலாம்
துணையொன்றின் துயர் தீர்க்க உயிர் தரவும் தூண்டிடலாம்
காதலினால் காலமெலாம் மகிழ்வுற்றே நீண்டிடலாம்!
பதில் வராத கடிதங்கள் பைத்தியமாய் ஆக்கிடலாம்
பதின்வயதுக் குழப்பங்கள் நிலைதழும்பாய் மாறிடலாம்
கழிவிரக்கப் புலம்பல்கள் கவிதையென்று பேர்பெறலாம்
காதலினால் பலவிதைகள் பாறையிலும் காய்ந்திடலாம்!
*********************
Thursday, February 01, 2007
சொற்சிலுவைகள்
சொற்களும்
நம்மைப் போன்றவையே!
கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.
பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.
சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.
நம்மைப் போன்றவையே!
கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.
பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.
சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.
Sunday, July 09, 2006
கருத்து மோதல்
தொடங்கிற்று விவாதம்
விரைவிலேயே
சூடு பிடித்தது.
நாட்கணக்கில் கூர்படுத்திய
ஆயுதங்கள் மோதிக்கொண்டன.
கருத்து மோதல்.
முடிந்து திரும்புகையில்,
உடனிருந்தவை
எதிரியின் மேல் உரசி
இன்னும் கூர்செய்து கொண்ட
ஆயுதங்கள்.
எதிரி முகாமில்
கண்டெடுத்த
புதிய நவீன ஆயுதங்கள்
அதே
பழைய கருத்துக்கள்.
விரைவிலேயே
சூடு பிடித்தது.
நாட்கணக்கில் கூர்படுத்திய
ஆயுதங்கள் மோதிக்கொண்டன.
கருத்து மோதல்.
முடிந்து திரும்புகையில்,
உடனிருந்தவை
எதிரியின் மேல் உரசி
இன்னும் கூர்செய்து கொண்ட
ஆயுதங்கள்.
எதிரி முகாமில்
கண்டெடுத்த
புதிய நவீன ஆயுதங்கள்
அதே
பழைய கருத்துக்கள்.
Tuesday, June 27, 2006
கடலில் சேர்ந்த ஆறு
நண்பர் ராசா என்னையும் ஒரு ஆறு பதிவு போடச் சொல்லியிருக்கார்.
என்ன எழுதறதுன்னு யோசிச்சா ஒண்ணுமே தோண மாட்டேங்குது. முதலாவது பேச்சுத் தமிழ்ல எழுதிப் பழக்கமில்ல. அப்புறம், சும்மா ஜாலிக்காக எழுதினதுமில்ல இது வரைக்கும். இப்பக் கூட, பிடிச்ச பாட்டு, படம்னு எழுத மனசு வரல. மயூரன் சொன்ன மாதிரி, இந்த மாதிரிப் பதிவுகள்ல சுய முன்னிறுத்தல் இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. அதாவது என்ன சொன்னா நம்மளைப் பத்தி நல்ல அபிப்பிராயம் உண்டாகும்னு தெரிஞ்சு அத எழுதறது. இப்பக் கூட, நான் பண்ணின தப்புகளைப் பத்தி எழுதினாக் கூட, அதுக்கும் பின்னாடி எனக்கு இருக்கிற உள்நோக்கம் எனக்குத் தெளிவாத் தெரியும். என்ன பண்றதுங்க, இப்படியே பழகிப் போச்சு. இதில இருந்து தப்பிச்சு எழுதலாம்தான் பொதுவா. ஆனா என்னைப் பத்தி, என்னோட குழப்பங்களைப் பத்தி, என்னோட பிரச்சினைகளைப் பத்தி மட்டுமே எழுதத் தோணுது. அவ்வளவு சுயநலம்.
இதோ, இப்ப நான் எட்டு வயசுல பண்ண ஒரு காரியம் பத்தி எழுத ஆரம்பிச்சேன். இதை ஊருக்கே சொல்லணுமா-னு ஒரு கேள்வி மனசுல. அவ்வளவுதான், அதை அழிச்சுட்டேன். இப்போ என்னதான் எழுத?
அதனால, நான் பண்ணியிருக்க வேண்டாம் அல்லது பண்ணியிருக்கணும்னு இப்போ நினைக்கிற, ஊருக்கே தெரிஞ்சாலும் தப்பில்லன்னு நான் நினைக்கிற ஆறு விஷயங்களை மட்டும் சொல்லப் போறேன். அடைப்புக்குறிக்குள்ள இருக்கறது என்னோட மனசாட்சி.
1. பத்தாவது படிக்கும்போது, பள்ளிக்கூடத்த விட்டு வேற பள்ளிக்கு மாறிப் போற ஒரு முன்னாள் நண்பன், வெளியே இருந்து நண்பர்களை அனுப்பிக் கூப்பிட்டப்போ, வீறாப்பா மாட்டேன்னு சொல்லாம இருந்திருக்கணும். ஒரு வருஷம் கழிச்சு அப்பா கூட வண்டியில உக்காந்து போறப்போ, அதே மாதிரி அவனும் அவங்கப்பா கூட வந்தான். ஒரு நொடி திரும்பிப் பாக்கத்தான் நேரம் இருந்துச்சு. அவனும் பாத்த மாதிரி இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்துருக்கும். (அப்போ, பெரிய கோவக்காரன், ஆனாலும் பின்னாடி வருத்தப்படற நல்ல மனசுக்காரன். அப்படித்தானே?)
2. பன்னிரெண்டாவதுல, தமிழ் செய்யுள் வகுப்பு நான் எடுத்தப்போ, வேதியியல் வாத்தியார் மேல இருக்கிற கோவத்துல, பெண்களைப் புகழ்ந்து இருந்த ஒரு கவிதை/செய்யுளைக் குதறி எடுத்து, மொத்தமா பெண்களைப் பத்தித் தப்பா சொல்லாம இருந்திருக்கணும். குறைஞ்சபட்சம், அதைப் பத்தி ஒரு பொண்ணு அடுத்த நாள் கேட்டப்போ, உள்மனசு சொன்ன மாதிரி அது தப்புனு ஒத்துக்கிட்டிருந்திருக்கணும். (ஓஹோ, வகுப்புல பாடம் எடுத்தீங்களோ? வாத்தியாரையே பகைச்சுக்கிட்டீங்களோ?)
3. அதே வருஷம், திருப்புத் தேர்வு எழுதும்போது வந்த பொருளாதாரப் பிரிவுக்குப் பாடம் எடுக்கிற டீச்சர், அரையாண்டுல எத்தனை பாடத்துல நூத்துக்கு நூறுனு ஆசையாவும், அக்கறையாவும் கேட்டபோதாவது, பதில் சொல்ல முடியாத உண்மை உறைச்சு கொஞ்சம் ஒழுங்காப் படிச்சிருக்கணும். ('நான் நல்லாப் படிச்சவன்தான், வயசுக் கோளாறு' அப்படின்னு சொன்னா ஒரு ஹீரோதான?)
4. என்னோட மாமா எனக்கு நியூமராலஜி பாத்து, பேரோட ஸ்பெல்லிங்கையும், கையெழுத்தையும் மாத்தச் சொன்னப்போ தைரியமா, எனக்கு நம்பிக்கை இல்லனு சொல்லியிருக்கணும். இப்போ அவங்களுக்கு எழுதுற மெயில்-ல மட்டும் அந்த ஸ்பெல்லிங் பயன்படுத்துற போலித்தனத்துல இருந்து தப்பிச்சிருக்கலாம். (பகுத்தறிவு?)
5. மனசுக்குப் பிடிச்ச பொண்ணு உக்காந்து பாத்துட்டிருக்கிற உற்சாகத்துல, உயரமான மரங்களுக்கு இடையில கட்டி வச்ச வலையில (இந்த வயசுல) குட்டிக் கரணம் போட்டுக் காட்டாம இருந்திருக்கணும். இப்போ எல்லாம் முடிஞ்சப்புறம், நினைச்சா என் மேலயே வர்ற கோவத்துல இருந்தாவது தப்பிச்சிருக்கலாம். ம்ம்ம்ம்.... ஒரு விதத்துல இது சிரிப்பாதான் இருக்கு. அவ்வளவு மோசமில்லை. (ஓஹோ! மூன்றாம் பிறை கமல்னு நினைப்பா?)
6. எத்தனையோ நண்பர்கள், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் கட்டாயம் கடிதம் போடறேன், ·போன் பண்ணறேன்னு சொல்லாம இருக்கலாம். குற்ற உணர்ச்சியாவது இல்லாம இருக்கும்.
இப்போ யோசிச்சு என்ன பண்ண? ஒண்ணும் பண்ணமுடியாது. அதாவது, ஆத்துத் தண்ணியைக் கடலுக்குப் போனப்புறம் குடிக்க முடியாது. காலம் கடந்து போச்சு. பெருமூச்சை விட்டுட்டு, இந்தப் பதிவையும் முடிப்போம்.
சரி, நான் ஒரு ஆறு பேரைக் கூப்பிடணுமாமில்ல! நான் அதைச் செய்யப் போறதில்ல. ஏன்னா, இந்த ஆறும் கடல்ல சேந்தாச்சு! (நம்ம பேருக்கு அர்த்தம் தெரியும்ல?)
என்ன எழுதறதுன்னு யோசிச்சா ஒண்ணுமே தோண மாட்டேங்குது. முதலாவது பேச்சுத் தமிழ்ல எழுதிப் பழக்கமில்ல. அப்புறம், சும்மா ஜாலிக்காக எழுதினதுமில்ல இது வரைக்கும். இப்பக் கூட, பிடிச்ச பாட்டு, படம்னு எழுத மனசு வரல. மயூரன் சொன்ன மாதிரி, இந்த மாதிரிப் பதிவுகள்ல சுய முன்னிறுத்தல் இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. அதாவது என்ன சொன்னா நம்மளைப் பத்தி நல்ல அபிப்பிராயம் உண்டாகும்னு தெரிஞ்சு அத எழுதறது. இப்பக் கூட, நான் பண்ணின தப்புகளைப் பத்தி எழுதினாக் கூட, அதுக்கும் பின்னாடி எனக்கு இருக்கிற உள்நோக்கம் எனக்குத் தெளிவாத் தெரியும். என்ன பண்றதுங்க, இப்படியே பழகிப் போச்சு. இதில இருந்து தப்பிச்சு எழுதலாம்தான் பொதுவா. ஆனா என்னைப் பத்தி, என்னோட குழப்பங்களைப் பத்தி, என்னோட பிரச்சினைகளைப் பத்தி மட்டுமே எழுதத் தோணுது. அவ்வளவு சுயநலம்.
இதோ, இப்ப நான் எட்டு வயசுல பண்ண ஒரு காரியம் பத்தி எழுத ஆரம்பிச்சேன். இதை ஊருக்கே சொல்லணுமா-னு ஒரு கேள்வி மனசுல. அவ்வளவுதான், அதை அழிச்சுட்டேன். இப்போ என்னதான் எழுத?
அதனால, நான் பண்ணியிருக்க வேண்டாம் அல்லது பண்ணியிருக்கணும்னு இப்போ நினைக்கிற, ஊருக்கே தெரிஞ்சாலும் தப்பில்லன்னு நான் நினைக்கிற ஆறு விஷயங்களை மட்டும் சொல்லப் போறேன். அடைப்புக்குறிக்குள்ள இருக்கறது என்னோட மனசாட்சி.
1. பத்தாவது படிக்கும்போது, பள்ளிக்கூடத்த விட்டு வேற பள்ளிக்கு மாறிப் போற ஒரு முன்னாள் நண்பன், வெளியே இருந்து நண்பர்களை அனுப்பிக் கூப்பிட்டப்போ, வீறாப்பா மாட்டேன்னு சொல்லாம இருந்திருக்கணும். ஒரு வருஷம் கழிச்சு அப்பா கூட வண்டியில உக்காந்து போறப்போ, அதே மாதிரி அவனும் அவங்கப்பா கூட வந்தான். ஒரு நொடி திரும்பிப் பாக்கத்தான் நேரம் இருந்துச்சு. அவனும் பாத்த மாதிரி இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்துருக்கும். (அப்போ, பெரிய கோவக்காரன், ஆனாலும் பின்னாடி வருத்தப்படற நல்ல மனசுக்காரன். அப்படித்தானே?)
2. பன்னிரெண்டாவதுல, தமிழ் செய்யுள் வகுப்பு நான் எடுத்தப்போ, வேதியியல் வாத்தியார் மேல இருக்கிற கோவத்துல, பெண்களைப் புகழ்ந்து இருந்த ஒரு கவிதை/செய்யுளைக் குதறி எடுத்து, மொத்தமா பெண்களைப் பத்தித் தப்பா சொல்லாம இருந்திருக்கணும். குறைஞ்சபட்சம், அதைப் பத்தி ஒரு பொண்ணு அடுத்த நாள் கேட்டப்போ, உள்மனசு சொன்ன மாதிரி அது தப்புனு ஒத்துக்கிட்டிருந்திருக்கணும். (ஓஹோ, வகுப்புல பாடம் எடுத்தீங்களோ? வாத்தியாரையே பகைச்சுக்கிட்டீங்களோ?)
3. அதே வருஷம், திருப்புத் தேர்வு எழுதும்போது வந்த பொருளாதாரப் பிரிவுக்குப் பாடம் எடுக்கிற டீச்சர், அரையாண்டுல எத்தனை பாடத்துல நூத்துக்கு நூறுனு ஆசையாவும், அக்கறையாவும் கேட்டபோதாவது, பதில் சொல்ல முடியாத உண்மை உறைச்சு கொஞ்சம் ஒழுங்காப் படிச்சிருக்கணும். ('நான் நல்லாப் படிச்சவன்தான், வயசுக் கோளாறு' அப்படின்னு சொன்னா ஒரு ஹீரோதான?)
4. என்னோட மாமா எனக்கு நியூமராலஜி பாத்து, பேரோட ஸ்பெல்லிங்கையும், கையெழுத்தையும் மாத்தச் சொன்னப்போ தைரியமா, எனக்கு நம்பிக்கை இல்லனு சொல்லியிருக்கணும். இப்போ அவங்களுக்கு எழுதுற மெயில்-ல மட்டும் அந்த ஸ்பெல்லிங் பயன்படுத்துற போலித்தனத்துல இருந்து தப்பிச்சிருக்கலாம். (பகுத்தறிவு?)
5. மனசுக்குப் பிடிச்ச பொண்ணு உக்காந்து பாத்துட்டிருக்கிற உற்சாகத்துல, உயரமான மரங்களுக்கு இடையில கட்டி வச்ச வலையில (இந்த வயசுல) குட்டிக் கரணம் போட்டுக் காட்டாம இருந்திருக்கணும். இப்போ எல்லாம் முடிஞ்சப்புறம், நினைச்சா என் மேலயே வர்ற கோவத்துல இருந்தாவது தப்பிச்சிருக்கலாம். ம்ம்ம்ம்.... ஒரு விதத்துல இது சிரிப்பாதான் இருக்கு. அவ்வளவு மோசமில்லை. (ஓஹோ! மூன்றாம் பிறை கமல்னு நினைப்பா?)
6. எத்தனையோ நண்பர்கள், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் கட்டாயம் கடிதம் போடறேன், ·போன் பண்ணறேன்னு சொல்லாம இருக்கலாம். குற்ற உணர்ச்சியாவது இல்லாம இருக்கும்.
இப்போ யோசிச்சு என்ன பண்ண? ஒண்ணும் பண்ணமுடியாது. அதாவது, ஆத்துத் தண்ணியைக் கடலுக்குப் போனப்புறம் குடிக்க முடியாது. காலம் கடந்து போச்சு. பெருமூச்சை விட்டுட்டு, இந்தப் பதிவையும் முடிப்போம்.
சரி, நான் ஒரு ஆறு பேரைக் கூப்பிடணுமாமில்ல! நான் அதைச் செய்யப் போறதில்ல. ஏன்னா, இந்த ஆறும் கடல்ல சேந்தாச்சு! (நம்ம பேருக்கு அர்த்தம் தெரியும்ல?)
Monday, June 19, 2006
பசுக்கொலை செய்யுங்கள் (அ) பாதுகாப்பற்ற நிம்மதி
தொடரும் அறிதலில்
செத்து மடிகின்றன
நான் வழிபட்டவை
வணங்கியவை
ரசித்தவை
என எத்தனையோ
புனிதப் பசுக்கள்.
இன்னும் வியப்பு,
நானும் சில
வளர்த்திருக்கிறேன்
நான் சிலவாக
வளர்ந்திருக்கிறேன்.
கொல்லுங்கள் எல்லாவற்றையும்.
எல்லாமே எனக்குப் பால் தந்தன.
ஆயினும்
நன்றி மறக்கும் வேளையிது.
பசுவற்ற பாழ்வெளியில்,
பாதுகாப்பு இல்லையென்றாலும்,
நிம்மதி இருக்கும்.
செத்து மடிகின்றன
நான் வழிபட்டவை
வணங்கியவை
ரசித்தவை
என எத்தனையோ
புனிதப் பசுக்கள்.
இன்னும் வியப்பு,
நானும் சில
வளர்த்திருக்கிறேன்
நான் சிலவாக
வளர்ந்திருக்கிறேன்.
கொல்லுங்கள் எல்லாவற்றையும்.
எல்லாமே எனக்குப் பால் தந்தன.
ஆயினும்
நன்றி மறக்கும் வேளையிது.
பசுவற்ற பாழ்வெளியில்,
பாதுகாப்பு இல்லையென்றாலும்,
நிம்மதி இருக்கும்.
Saturday, June 10, 2006
பிரார்த்தனை
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாரதியின் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனோ கண்ணில் கண்ணீர் பெருகிற்று. தேடினாலும் காரணம் கிடைக்கப் போவதில்லை. இந்த ஒலியலைகள் உள்ளே சென்று என்ன செய்கின்றனவென்று என்றுதான் அறிந்தேன்? காண்பதெல்லாம், ஏதோ அமைதி அல்லது நெகிழ்வு. ஏன்? தெரியாது. பக்தி? கேள்விகள் கேட்டு அதையும்தான் துரத்தியாயிற்றே. பக்தியுடன் எதையாவது பாடி அல்லது கேட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பிரார்த்தனை செய்தோ, இன்னுமதிகம் காலம்.
பிரார்த்தனை! ஒரு நண்பிக்காகப் பிரார்த்தனை செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். காதல் பிரச்சினைதான். பிரார்த்தனை செய்கிறேனென்று சொன்னால் என்ன பொருள்? என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று பொருள். அது தெரிந்துதான் தனக்காகப் பிரார்த்தனை செய்யக் கேட்டிருப்பாள். பிச்சைக்காரனிடம் பொன் குடமா கேட்பார்கள்? அவளுக்குத் தெரியாது, இந்தப் பிச்சைக்காரனிடம் திருவோடு கூட இல்லையென்று.
எத்தனை துயரங்கள்? எத்தனை பிரச்சினைகள்? வெவ்வேறு மதம். ஊர் என்ன சொல்லும்? அவன் என்ன சொல்வான்? இவன் என்ன சொல்வான்? அம்மா வருந்துவாரே! அப்பா வருந்துவாரே! குடும்ப கௌரவம் என்னாவது? மதம் மாற முடியாது, சுயமே அனுமதிக்காது அதை.
இதோ பிரார்த்திக்கிறேன். உனக்காக. தடை தாண்டி வெல்லும் திறன் உனக்குண்டு பெண்ணே! மகிழ்வுற்றிரு! இறையொன்றிருந்தாலும் இல்லையென்றாலும், அது கருணை வடிவமென்பது உண்மையென்றாலும், அல்லது ஒன்றையொன்று உண்டு வாழும் உயிர் படைத்துக் கண்டு களிப்புற்று வாழும் சக்தியென்றாலும், உன் வாழ்வு சிறப்புற வேண்டுகிறேன்!
உள்ளத் தெளிவோடிரு; உன் அன்பை நம்பு. அது உன்னைக் கரைசேர்க்கும். அது மட்டுமே!
பிரார்த்தனை! ஒரு நண்பிக்காகப் பிரார்த்தனை செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். காதல் பிரச்சினைதான். பிரார்த்தனை செய்கிறேனென்று சொன்னால் என்ன பொருள்? என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று பொருள். அது தெரிந்துதான் தனக்காகப் பிரார்த்தனை செய்யக் கேட்டிருப்பாள். பிச்சைக்காரனிடம் பொன் குடமா கேட்பார்கள்? அவளுக்குத் தெரியாது, இந்தப் பிச்சைக்காரனிடம் திருவோடு கூட இல்லையென்று.
எத்தனை துயரங்கள்? எத்தனை பிரச்சினைகள்? வெவ்வேறு மதம். ஊர் என்ன சொல்லும்? அவன் என்ன சொல்வான்? இவன் என்ன சொல்வான்? அம்மா வருந்துவாரே! அப்பா வருந்துவாரே! குடும்ப கௌரவம் என்னாவது? மதம் மாற முடியாது, சுயமே அனுமதிக்காது அதை.
இதோ பிரார்த்திக்கிறேன். உனக்காக. தடை தாண்டி வெல்லும் திறன் உனக்குண்டு பெண்ணே! மகிழ்வுற்றிரு! இறையொன்றிருந்தாலும் இல்லையென்றாலும், அது கருணை வடிவமென்பது உண்மையென்றாலும், அல்லது ஒன்றையொன்று உண்டு வாழும் உயிர் படைத்துக் கண்டு களிப்புற்று வாழும் சக்தியென்றாலும், உன் வாழ்வு சிறப்புற வேண்டுகிறேன்!
உள்ளத் தெளிவோடிரு; உன் அன்பை நம்பு. அது உன்னைக் கரைசேர்க்கும். அது மட்டுமே!
Labels:
எண்ணவோட்டம்,
காதல்,
பிரார்த்தனை
Wednesday, May 24, 2006
ஒரு சுய-மறு-பரிசீலனை
வலைப்பதிவர் பெயர்: தன. வித்யாசாகரன்
வலைப்பூ பெயர் : தெளிவு, chumma
சுட்டி(url) :
http://vidyasa.blogspot.com
http://vidyasakaran.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: திருநெல்வேலி, பொள்ளாச்சி, பெங்களூர் (சொந்த ஊர், வளர்ந்த ஊர், வசிக்கும் ஊர்)
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் கண்டுகொண்டதுதான். மாலன் அவர்களது கட்டுரையொன்றின் வழி.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 2004 (இதன் முன் rediff-இல் ஒரு வலைப்பூ ஆரம்பித்து, தொடராமல் விட்டு விட்டேன்)
இது எத்தனையாவது பதிவு: அதிகமில்லை, 22
இப்பதிவின் சுட்டி(url): http://vidyasa.blogspot.com/2006/05/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
தமிழ்: சிந்தனையை ஒழுங்காகப் பதிவு செய்து, என் கேள்விகட்கு விடையறிய உதவுமென்ற எண்ணம். இப்போது கிறுக்கல் தளமாகி விட்டது. பரவாயில்லை.
ஆங்கிலம்: என் உணர்வுகளைச் சிலருடன் பகிர்ந்து கொள்ள
சந்தித்த அனுபவங்கள்: அதிகமில்லை.
பெற்ற நண்பர்கள்: மிகக் குறைவு. என் நோக்கமும் அதுவல்ல
கற்றவை: வாசித்தவை நிறைய உண்டு. கற்றவை மிகக் குறைவு. பிறரது எண்ண்ங்களைப் பற்றிய, பல்வேறு புதிய விதயங்களைப் பற்றிய பொதுவான புரிதல் வளர்ந்திருக்கிறது.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: பெரிய வித்யாசமில்லை. தாளில் எழுதாமல் தளத்தில் பதிகிறேன். என் சுதந்திரம் என்னிடம், எப்போதும்போல் பத்திரம்.
இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து குழம்பித் தெளிந்து, குழம்பித் தொடர்தல்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என் profile-இல் உள்ளது தவிர வேறொன்றுமில்லை.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: நன்றி! ஒரு சுய பரிசீலனைக்கு உதவியமைக்கு. :-)
வலைப்பூ பெயர் : தெளிவு, chumma
சுட்டி(url) :
http://vidyasa.blogspot.com
http://vidyasakaran.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: திருநெல்வேலி, பொள்ளாச்சி, பெங்களூர் (சொந்த ஊர், வளர்ந்த ஊர், வசிக்கும் ஊர்)
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் கண்டுகொண்டதுதான். மாலன் அவர்களது கட்டுரையொன்றின் வழி.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 2004 (இதன் முன் rediff-இல் ஒரு வலைப்பூ ஆரம்பித்து, தொடராமல் விட்டு விட்டேன்)
இது எத்தனையாவது பதிவு: அதிகமில்லை, 22
இப்பதிவின் சுட்டி(url): http://vidyasa.blogspot.com/2006/05/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
தமிழ்: சிந்தனையை ஒழுங்காகப் பதிவு செய்து, என் கேள்விகட்கு விடையறிய உதவுமென்ற எண்ணம். இப்போது கிறுக்கல் தளமாகி விட்டது. பரவாயில்லை.
ஆங்கிலம்: என் உணர்வுகளைச் சிலருடன் பகிர்ந்து கொள்ள
சந்தித்த அனுபவங்கள்: அதிகமில்லை.
பெற்ற நண்பர்கள்: மிகக் குறைவு. என் நோக்கமும் அதுவல்ல
கற்றவை: வாசித்தவை நிறைய உண்டு. கற்றவை மிகக் குறைவு. பிறரது எண்ண்ங்களைப் பற்றிய, பல்வேறு புதிய விதயங்களைப் பற்றிய பொதுவான புரிதல் வளர்ந்திருக்கிறது.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: பெரிய வித்யாசமில்லை. தாளில் எழுதாமல் தளத்தில் பதிகிறேன். என் சுதந்திரம் என்னிடம், எப்போதும்போல் பத்திரம்.
இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து குழம்பித் தெளிந்து, குழம்பித் தொடர்தல்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என் profile-இல் உள்ளது தவிர வேறொன்றுமில்லை.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: நன்றி! ஒரு சுய பரிசீலனைக்கு உதவியமைக்கு. :-)
Tuesday, April 11, 2006
என் சவக்கிடங்கில் ஒரு புதிய வருகை
மனதின் ஏதோ ஓர் மூலையினின்றும்
தலை காட்டிற்று அது.
தாவிப் பிடித்துத்
துவக்கு விசாரணையை.
ஏன், எதற்கு, எப்படி,
யார், எங்கு, எப்போது,
இன்ன பல கேள்விகள்.
தத்துவப் படுக்கையில் தள்ளி
அறுத்தும் ஆராய்ந்து விடு.
எப்படியும் வர வேண்டும்,
ஒரு முடிவு, வந்தே விட்டது.
இனி அலங்காரம்தான்.
புதிதான, புதிரான சொற்கள்,
சொல்லடுக்குகள் கொண்டு.
எதுகை மோனை வேண்டாம்,
அது பழைய காலம்.
கூர்மையாக்கு, இறுக்கமாக்கு
மூச்சுத் திணறாது;
அறுத்தபோதே இறந்தாயிற்று.
ஆயிற்றா,
அப்படியே தள்ளி வந்து,
சவக்கிடங்கில் அழகாக நிறுத்து.
காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரசிக்கவும், ருசிக்கவும்,
பாராட்டவும், பரிசளிக்கவும்,
இன்னும் ஆராய்ந்து,
அதைக் கொண்டு
தத்தம் சவக்கிடங்கை அலங்கரிக்கவும்.
தலை காட்டிற்று அது.
தாவிப் பிடித்துத்
துவக்கு விசாரணையை.
ஏன், எதற்கு, எப்படி,
யார், எங்கு, எப்போது,
இன்ன பல கேள்விகள்.
தத்துவப் படுக்கையில் தள்ளி
அறுத்தும் ஆராய்ந்து விடு.
எப்படியும் வர வேண்டும்,
ஒரு முடிவு, வந்தே விட்டது.
இனி அலங்காரம்தான்.
புதிதான, புதிரான சொற்கள்,
சொல்லடுக்குகள் கொண்டு.
எதுகை மோனை வேண்டாம்,
அது பழைய காலம்.
கூர்மையாக்கு, இறுக்கமாக்கு
மூச்சுத் திணறாது;
அறுத்தபோதே இறந்தாயிற்று.
ஆயிற்றா,
அப்படியே தள்ளி வந்து,
சவக்கிடங்கில் அழகாக நிறுத்து.
காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரசிக்கவும், ருசிக்கவும்,
பாராட்டவும், பரிசளிக்கவும்,
இன்னும் ஆராய்ந்து,
அதைக் கொண்டு
தத்தம் சவக்கிடங்கை அலங்கரிக்கவும்.
என் இன்பம் எதில்?
நண்பர் பாழ் எழுதிய கவிதை 'தேடாதே, தொலைந்து போவாய்' -இன் தூண்டுதலில் எழுதியது...
பாழ்,
நான் நினைப்பது...தேடல் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேட வேண்டாம் என்றுதான் நீங்களும் சொல்கிறீர்கள். மற்றபடி எப்போதும் எல்லோரும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம், இல்லையா? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், நாம் எல்லோரும் தேடுவது இன்பம் என்று சொல்லலாமா? இந்த இன்பம் எதில் என்பதில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறோம். இன்னொருவருடன் மட்டுமல்ல, நமக்குள்ளேயே, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருள் நமக்கு இன்பம் அளிப்பதாகத் தோன்றுகிறது. அதுவும் போக, நாம் நாடுவது இன்பம் ஆனாலும், துன்பம் வராமற் போவதுமில்லை. இதுதான் நம்மைத் துன்பம் இல்லாத நிலைத்த இன்பம் எது என்று தேடத் தூண்டுகிறது. இந்தத் தேடல், முடிவாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதில் முடிகிறது.
இன்னொரு வகையில் பார்த்தால், நம் முன் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்தான் எத்தனை எத்தனை? அடுத்த நொடியில், நான் செய்யத் தகுந்ததாக இருக்கும் காரியங்கள் எத்தனை ஆயிரம்? அதில் எதைச் செய்வது என்ற கேள்வி வரும்போது, நான் எதைத் தேர்ந்தெடுப்பது? குறிக்கோள் ஒன்று வைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்று சொல்வார்கள். என் பிரச்சினை, நான் அதிலும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறேன். கடைசியில் வரும் கேள்வி இதுதான், வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
ஆக, பேராசைதான் பிரச்சினை என்று தோன்றுகிறது. 'கேட்பினும் பெரிது கேள்' என்று சொன்னார்கள். எது பெரிது என்று அறிவதில் வாழ்க்கையைத் தொலைக்கிறோம். இதை விட்டு விட்டு, வேறு ஏதாவதைத் தேடேன் என்றால், பொருள், பதவி, மானுட நன்மை, ஒற்றுமை என்று எதையாவது தேடலாம்தான். இத்தனை காலமாக மனிதர்கள் இவை எல்லாவற்றையும் தேடியதில் என்ன நிகழ்ந்திருக்கிறது? எப்படிப்பட்ட உலகை அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்று அக்கறை சார்ந்த கேள்வி வருகிறது. இதுவும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தூண்டுகிறது.
கீதை சொல்கிறது. 'பயனை எதிர்பாராதே, கடமையைச் செய்' என்று. ஒரு வேளை, அது சொல்வது, எதையோ தேடாதே, இந்த நொடியில் செய்ய வேண்டியதைச் செய் என்றா? என்றாலும், என் கடமை என்னவென்பதை யார் முடிவு செய்வது? நிச்சயமாக என் தந்தையின் கடமை அல்ல. என் கடமையைத் தேடும்போதும் நான் முட்டி நிற்பது நம் கேள்வியில்தான்.
மீண்டும், இன்பம் குறித்துப் பேசினால், 'என் இன்பம் பணக்காரனாவதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்', 'என் இன்பம் அதிகாரம் சம்பாதிப்பதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்' என்றெல்லாம் யார் சொன்னாலும் அதில் தவறு இல்லைதானே. (மற்றவர்களைத் துன்புறுத்தாமல், என்று ஓர் இணைப்பு சேர்க்கச் சொல்லாதீர்கள், மீண்டும் அது நமது கேள்வி நோக்கித் தள்ளி விடும்). இங்கு நான் சொல்வது, 'என் இன்பம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை, எனவேதான் எதில் இன்பம் என்று தேடுகிறேன்' என்று.
இப்போது என்னிடம் இரண்டு விஷயங்கள் இந்தத் தேடலைத் தூண்டுவதாக இருக்கின்றன. ஒன்று இன்பம், மற்றது நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவின்மை. இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். நான் என்னதான் எனக்கென்று ஒரு செயலை வகுத்துக் கொண்டாலும், அதன் காரணம் என் இன்பம் அதில் இருப்பதுதான். ஆக, நாம் தேடுவது இன்பம் என்பதுதான்.
இப்போது ஓர் அதிர்ச்சியான எண்ணம் வருகிறது. நான் ஏன் எதிலும் இன்பம் காணாமல், தேடிக் கொண்டே இருக்கிறேன்? என்னுடைய எதிர்மறைச் சிந்தனை காரணமா? தாழ்வு மனப்பான்மையா? மற்றவர்களது வெற்றியை ஒப்புக் கொள்ள இயலாமல், 'நான் கண்டுபிடிக்கிறேன் பார் இதிலும் பெரிது' என்று எண்ணும் அசூயையா?
அல்லது, எதையாவது தேடுவதென்று ஆயிற்று. நான் இதைத் தேடி விட்டுப் போகிறேன், இதிலென்ன தவறு? இதற்குத்தான் நீங்கள் பதில் சொல்கிறீர்கள், 'தேடிக் கொள், ஆனால் உன் வலையில் நீயே சிக்கி மீளத் தெரியாமல் புலம்புவாய், துவளுவாய்' என்று. உண்மை, நீங்கள் என் முந்தைய பதிவுகளில் இதற்கான அடையாளத்தைக் கண்டிருக்கவும் கூடும். ஆனால் அதன் பின்னும் தேடிக் கொண்டேயிருப்பதன் காரணம் என்ன? ஒரு வேளை என் இன்பம் இந்தப் புலம்பலில்தானோ? துவண்டு விழுவதில்தான் நான் இன்பம் காண்கிறேனோ?
எனக்குத் தோன்றுகிறது, என் இன்பம் பதில் தெரியாத கேள்விகளை அடுக்குவதில்தான் என்று. ம்ம்ம்...
பாழ்,
நான் நினைப்பது...தேடல் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேட வேண்டாம் என்றுதான் நீங்களும் சொல்கிறீர்கள். மற்றபடி எப்போதும் எல்லோரும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம், இல்லையா? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், நாம் எல்லோரும் தேடுவது இன்பம் என்று சொல்லலாமா? இந்த இன்பம் எதில் என்பதில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறோம். இன்னொருவருடன் மட்டுமல்ல, நமக்குள்ளேயே, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருள் நமக்கு இன்பம் அளிப்பதாகத் தோன்றுகிறது. அதுவும் போக, நாம் நாடுவது இன்பம் ஆனாலும், துன்பம் வராமற் போவதுமில்லை. இதுதான் நம்மைத் துன்பம் இல்லாத நிலைத்த இன்பம் எது என்று தேடத் தூண்டுகிறது. இந்தத் தேடல், முடிவாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதில் முடிகிறது.
இன்னொரு வகையில் பார்த்தால், நம் முன் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்தான் எத்தனை எத்தனை? அடுத்த நொடியில், நான் செய்யத் தகுந்ததாக இருக்கும் காரியங்கள் எத்தனை ஆயிரம்? அதில் எதைச் செய்வது என்ற கேள்வி வரும்போது, நான் எதைத் தேர்ந்தெடுப்பது? குறிக்கோள் ஒன்று வைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்று சொல்வார்கள். என் பிரச்சினை, நான் அதிலும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறேன். கடைசியில் வரும் கேள்வி இதுதான், வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
ஆக, பேராசைதான் பிரச்சினை என்று தோன்றுகிறது. 'கேட்பினும் பெரிது கேள்' என்று சொன்னார்கள். எது பெரிது என்று அறிவதில் வாழ்க்கையைத் தொலைக்கிறோம். இதை விட்டு விட்டு, வேறு ஏதாவதைத் தேடேன் என்றால், பொருள், பதவி, மானுட நன்மை, ஒற்றுமை என்று எதையாவது தேடலாம்தான். இத்தனை காலமாக மனிதர்கள் இவை எல்லாவற்றையும் தேடியதில் என்ன நிகழ்ந்திருக்கிறது? எப்படிப்பட்ட உலகை அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்று அக்கறை சார்ந்த கேள்வி வருகிறது. இதுவும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தூண்டுகிறது.
கீதை சொல்கிறது. 'பயனை எதிர்பாராதே, கடமையைச் செய்' என்று. ஒரு வேளை, அது சொல்வது, எதையோ தேடாதே, இந்த நொடியில் செய்ய வேண்டியதைச் செய் என்றா? என்றாலும், என் கடமை என்னவென்பதை யார் முடிவு செய்வது? நிச்சயமாக என் தந்தையின் கடமை அல்ல. என் கடமையைத் தேடும்போதும் நான் முட்டி நிற்பது நம் கேள்வியில்தான்.
மீண்டும், இன்பம் குறித்துப் பேசினால், 'என் இன்பம் பணக்காரனாவதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்', 'என் இன்பம் அதிகாரம் சம்பாதிப்பதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்' என்றெல்லாம் யார் சொன்னாலும் அதில் தவறு இல்லைதானே. (மற்றவர்களைத் துன்புறுத்தாமல், என்று ஓர் இணைப்பு சேர்க்கச் சொல்லாதீர்கள், மீண்டும் அது நமது கேள்வி நோக்கித் தள்ளி விடும்). இங்கு நான் சொல்வது, 'என் இன்பம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை, எனவேதான் எதில் இன்பம் என்று தேடுகிறேன்' என்று.
இப்போது என்னிடம் இரண்டு விஷயங்கள் இந்தத் தேடலைத் தூண்டுவதாக இருக்கின்றன. ஒன்று இன்பம், மற்றது நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவின்மை. இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். நான் என்னதான் எனக்கென்று ஒரு செயலை வகுத்துக் கொண்டாலும், அதன் காரணம் என் இன்பம் அதில் இருப்பதுதான். ஆக, நாம் தேடுவது இன்பம் என்பதுதான்.
இப்போது ஓர் அதிர்ச்சியான எண்ணம் வருகிறது. நான் ஏன் எதிலும் இன்பம் காணாமல், தேடிக் கொண்டே இருக்கிறேன்? என்னுடைய எதிர்மறைச் சிந்தனை காரணமா? தாழ்வு மனப்பான்மையா? மற்றவர்களது வெற்றியை ஒப்புக் கொள்ள இயலாமல், 'நான் கண்டுபிடிக்கிறேன் பார் இதிலும் பெரிது' என்று எண்ணும் அசூயையா?
அல்லது, எதையாவது தேடுவதென்று ஆயிற்று. நான் இதைத் தேடி விட்டுப் போகிறேன், இதிலென்ன தவறு? இதற்குத்தான் நீங்கள் பதில் சொல்கிறீர்கள், 'தேடிக் கொள், ஆனால் உன் வலையில் நீயே சிக்கி மீளத் தெரியாமல் புலம்புவாய், துவளுவாய்' என்று. உண்மை, நீங்கள் என் முந்தைய பதிவுகளில் இதற்கான அடையாளத்தைக் கண்டிருக்கவும் கூடும். ஆனால் அதன் பின்னும் தேடிக் கொண்டேயிருப்பதன் காரணம் என்ன? ஒரு வேளை என் இன்பம் இந்தப் புலம்பலில்தானோ? துவண்டு விழுவதில்தான் நான் இன்பம் காண்கிறேனோ?
எனக்குத் தோன்றுகிறது, என் இன்பம் பதில் தெரியாத கேள்விகளை அடுக்குவதில்தான் என்று. ம்ம்ம்...
Wednesday, April 05, 2006
ஒரு காயலான் கடையைப் பற்றி...
அது ஒரு காயலான் கடை.
ஆம், வெறும் காயலான் கடை.
ஓடும் பேருந்திலிருந்து பார்க்கப்பட்டது;
நாறும் புகையிலைச் சாற்றுக்காகக் காத்திருந்த
கண்ணாடி ஜன்னல் வழியே;
பார்த்தவன்,
இருபத்தாறு வயதான
கண்களைச் சுமந்துகொண்டு,
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்;
சொல்லாத, மறுக்கப்பட்ட
காதலின் மிச்சத்தைச்
சுமந்து கொண்டும், இழந்து கொண்டும்;
தான் உடைந்ததெனக் கருதிய
இதயத்தின் துண்டுகளைக்
கவனமாக இறுக்கிப் பிடித்து;
கடந்த காலத்தினின்றும்
பிரித்தறியவியலாத,
புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.
அது ஒரு காயலான் கடை.
ஆம், வெறும் காயலான் கடை.
ஓடும் பேருந்திலிருந்து பார்க்கப்பட்டது;
நாறும் புகையிலைச் சாற்றுக்காகக் காத்திருந்த
கண்ணாடி ஜன்னல் வழியே;
பார்த்தவன்,
இருபத்தாறு வயதான
கண்களைச் சுமந்துகொண்டு,
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்;
சொல்லாத, மறுக்கப்பட்ட
காதலின் மிச்சத்தைச்
சுமந்து கொண்டும், இழந்து கொண்டும்;
தான் உடைந்ததெனக் கருதிய
இதயத்தின் துண்டுகளைக்
கவனமாக இறுக்கிப் பிடித்து;
கடந்த காலத்தினின்றும்
பிரித்தறியவியலாத,
புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.
அது ஒரு காயலான் கடை.
Saturday, March 25, 2006
நானும் நானோ? - 2
இப்பதிவு, சென்ற பதிவின் (நானும் நானோ?) பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக வருவது.
'நான்' என்பதுதான் எல்லாவற்றையும் பின்னிருந்து (அல்லது உள்ளிருந்து) நடத்துவது. இந்த 'நான்'-ஆல் உருவாக்கப்பட்டது, தொகுக்கப்பட்டது மனம். இந்த மனம் வளர்ச்சியடைந்த நிலையில், நுண்ணியவற்றை ஆராயும் வல்லமை பெற்றதாகிறது. அது தனது மூலமாகிய 'நான்'-ஐ ஆராயும்போதுதான் நான் முன்பு கூறிய தத்துவம் உருவாகிறது. செயப்படுபொருள் எழுவாயை ஆராய்வதால், இது மிகவும் சிக்கலாகிறது.
அதே நேரத்தில், இந்த மனம் 'நான்'-ஆல் இயக்கப்பட்டபோதும், 'நான்'-ஐ மறந்து அல்லது பொருட்படுத்தாமல் இருக்கும்போது நேரக்கூடிய ஓர் அழகிய தருணத்தைத்தான் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஒரு நாய்க்குட்டி மடியில் கிடந்து விளையாடும்போது, மனம் 'நான்' என்ற வெளிப்படையான, ஒருமுகமான உணர்வு இல்லாமல் அடையும் இன்பம் குறைந்ததா என்ன?
ஏனோ, நாம்தான் இன்பம் நிலையானதல்ல. நிலையான இன்பம் பெற, இந்த 'நான்'-இன் மூலத்தை அறிந்து, ஆராய்ந்து உணர வேண்டுமென்று முயல்கிறோம். அது ஒரு வகையான வறட்சி நிலைக்கு இட்டுச் செல்கிறதல்லவா? ஒரு வேளை முதிர்ச்சியடைந்த நிலையில் அந்த முழுமையை அடையக் கூடுமோ என்னவோ? ஆயினும், நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தும் எதிலும் இன்பம் இருக்க முடியுமா என்ன? அப்படி இருந்தாலும், அது சுய இன்பத்தை விடவும் கீழானதல்லவா?
எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும். ஆனால், நானோ, தத்துவம் என்று நான் கருதும் ஏதோ ஒன்றை இந்த வெறுமையில் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன். ஓர் எளிமையான, அழகான தருணம் (நான் தருணமென்பது, பொருளாகவோ, செயலாகவோ, உணர்வாகவோ அல்லது எண்ணமாகக் கூடவோ இருக்கலாம்), இந்தத் தத்துவத்தின் இயலாமையை அழகாக உணர்த்திச் செல்லும்.
இதோ, இப்போது கூட என் 'மனதில்' தோன்றியவற்றை இட்டு இப்பதிவை நிரப்பி விட்டேன். இதை மீண்டும் படிக்கும்போது எழும் கேள்விகளுக்கோ குறைவில்லை.
நான் எப்போதும் கூறுவது போல, இப் பதிவு அதை நான் எழுதும் நொடியில் எனக்குச் சரியென்று பட்டவற்றின் தொகுப்பு மட்டுமே.
'நான்' என்பதுதான் எல்லாவற்றையும் பின்னிருந்து (அல்லது உள்ளிருந்து) நடத்துவது. இந்த 'நான்'-ஆல் உருவாக்கப்பட்டது, தொகுக்கப்பட்டது மனம். இந்த மனம் வளர்ச்சியடைந்த நிலையில், நுண்ணியவற்றை ஆராயும் வல்லமை பெற்றதாகிறது. அது தனது மூலமாகிய 'நான்'-ஐ ஆராயும்போதுதான் நான் முன்பு கூறிய தத்துவம் உருவாகிறது. செயப்படுபொருள் எழுவாயை ஆராய்வதால், இது மிகவும் சிக்கலாகிறது.
அதே நேரத்தில், இந்த மனம் 'நான்'-ஆல் இயக்கப்பட்டபோதும், 'நான்'-ஐ மறந்து அல்லது பொருட்படுத்தாமல் இருக்கும்போது நேரக்கூடிய ஓர் அழகிய தருணத்தைத்தான் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஒரு நாய்க்குட்டி மடியில் கிடந்து விளையாடும்போது, மனம் 'நான்' என்ற வெளிப்படையான, ஒருமுகமான உணர்வு இல்லாமல் அடையும் இன்பம் குறைந்ததா என்ன?
ஏனோ, நாம்தான் இன்பம் நிலையானதல்ல. நிலையான இன்பம் பெற, இந்த 'நான்'-இன் மூலத்தை அறிந்து, ஆராய்ந்து உணர வேண்டுமென்று முயல்கிறோம். அது ஒரு வகையான வறட்சி நிலைக்கு இட்டுச் செல்கிறதல்லவா? ஒரு வேளை முதிர்ச்சியடைந்த நிலையில் அந்த முழுமையை அடையக் கூடுமோ என்னவோ? ஆயினும், நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தும் எதிலும் இன்பம் இருக்க முடியுமா என்ன? அப்படி இருந்தாலும், அது சுய இன்பத்தை விடவும் கீழானதல்லவா?
எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும். ஆனால், நானோ, தத்துவம் என்று நான் கருதும் ஏதோ ஒன்றை இந்த வெறுமையில் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன். ஓர் எளிமையான, அழகான தருணம் (நான் தருணமென்பது, பொருளாகவோ, செயலாகவோ, உணர்வாகவோ அல்லது எண்ணமாகக் கூடவோ இருக்கலாம்), இந்தத் தத்துவத்தின் இயலாமையை அழகாக உணர்த்திச் செல்லும்.
இதோ, இப்போது கூட என் 'மனதில்' தோன்றியவற்றை இட்டு இப்பதிவை நிரப்பி விட்டேன். இதை மீண்டும் படிக்கும்போது எழும் கேள்விகளுக்கோ குறைவில்லை.
நான் எப்போதும் கூறுவது போல, இப் பதிவு அதை நான் எழுதும் நொடியில் எனக்குச் சரியென்று பட்டவற்றின் தொகுப்பு மட்டுமே.
Tuesday, March 14, 2006
நானும் நானோ?
பாழ் எழுதிய 'நீயாகிய நீ' கவிதையால் தூண்டப்பட்டு...
என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?
என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?
Subscribe to:
Posts (Atom)