இப்பதிவு, சென்ற பதிவின் (நானும் நானோ?) பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக வருவது.
'நான்' என்பதுதான் எல்லாவற்றையும் பின்னிருந்து (அல்லது உள்ளிருந்து) நடத்துவது. இந்த 'நான்'-ஆல் உருவாக்கப்பட்டது, தொகுக்கப்பட்டது மனம். இந்த மனம் வளர்ச்சியடைந்த நிலையில், நுண்ணியவற்றை ஆராயும் வல்லமை பெற்றதாகிறது. அது தனது மூலமாகிய 'நான்'-ஐ ஆராயும்போதுதான் நான் முன்பு கூறிய தத்துவம் உருவாகிறது. செயப்படுபொருள் எழுவாயை ஆராய்வதால், இது மிகவும் சிக்கலாகிறது.
அதே நேரத்தில், இந்த மனம் 'நான்'-ஆல் இயக்கப்பட்டபோதும், 'நான்'-ஐ மறந்து அல்லது பொருட்படுத்தாமல் இருக்கும்போது நேரக்கூடிய ஓர் அழகிய தருணத்தைத்தான் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஒரு நாய்க்குட்டி மடியில் கிடந்து விளையாடும்போது, மனம் 'நான்' என்ற வெளிப்படையான, ஒருமுகமான உணர்வு இல்லாமல் அடையும் இன்பம் குறைந்ததா என்ன?
ஏனோ, நாம்தான் இன்பம் நிலையானதல்ல. நிலையான இன்பம் பெற, இந்த 'நான்'-இன் மூலத்தை அறிந்து, ஆராய்ந்து உணர வேண்டுமென்று முயல்கிறோம். அது ஒரு வகையான வறட்சி நிலைக்கு இட்டுச் செல்கிறதல்லவா? ஒரு வேளை முதிர்ச்சியடைந்த நிலையில் அந்த முழுமையை அடையக் கூடுமோ என்னவோ? ஆயினும், நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தும் எதிலும் இன்பம் இருக்க முடியுமா என்ன? அப்படி இருந்தாலும், அது சுய இன்பத்தை விடவும் கீழானதல்லவா?
எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும். ஆனால், நானோ, தத்துவம் என்று நான் கருதும் ஏதோ ஒன்றை இந்த வெறுமையில் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன். ஓர் எளிமையான, அழகான தருணம் (நான் தருணமென்பது, பொருளாகவோ, செயலாகவோ, உணர்வாகவோ அல்லது எண்ணமாகக் கூடவோ இருக்கலாம்), இந்தத் தத்துவத்தின் இயலாமையை அழகாக உணர்த்திச் செல்லும்.
இதோ, இப்போது கூட என் 'மனதில்' தோன்றியவற்றை இட்டு இப்பதிவை நிரப்பி விட்டேன். இதை மீண்டும் படிக்கும்போது எழும் கேள்விகளுக்கோ குறைவில்லை.
நான் எப்போதும் கூறுவது போல, இப் பதிவு அதை நான் எழுதும் நொடியில் எனக்குச் சரியென்று பட்டவற்றின் தொகுப்பு மட்டுமே.
Saturday, March 25, 2006
Tuesday, March 14, 2006
நானும் நானோ?
பாழ் எழுதிய 'நீயாகிய நீ' கவிதையால் தூண்டப்பட்டு...
என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?
என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?
Thursday, March 02, 2006
எச்சரிக்கை

கடவுள், கருணை
என்று சொல்லிக்கொண்டு
யாரும் என்னிடம் வந்துவிட வேண்டாம்.
நான்
உங்கள் முகத்தில்
உமிழக் கூடும்.
அல்லது
என் கூர்நகங் கொண்டு
முகத்தைக் கிழிக்கக் கூடும்.
என்
அறியாமை கண்டு சிரிக்கவோ,
அல்லது
எனக்கு ஞானம் வர வேண்டி அழவோ,
உங்கள் மதம்சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
என்ன இழவானாலும்,
என் காதில் விழாதபடிச் செய்யுங்கள்.
அது நல்லது,
உங்களுக்கு.
Sunday, February 26, 2006
நேற்று

நேற்று, 'Gone with the wind' (Margaret Mitchell) படித்து முடித்தேன். இடையில் சிறிது இழுத்தது போல் தோன்றினாலும், மிகவும் அருமையான நாவல். எல்லா நல்ல நாவல்களையும் போல, முடித்த பின், சற்று நேரம் இருந்து யோசிக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அதன் கதாபாத்திரங்கள் மனதிலிருந்து நீங்கப் போவதில்லை.
முடித்தேனா? அடுத்து, பாலகுமாரனின் 'பயணிகள் கவனிக்கவும்' மூன்றாவது முறையாகப் படிக்கத் தொடங்கினேன். இதைக் கடைசியாகப் படித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கங்கு வெட்டி, படித்து முடித்தேன், அப்படியொன்றும் சிறந்த நாவலாக இப்போது தோன்றவில்லை என்றாலும். பிறகு, வார இறுதியின் மிகப் பெரிய வேலையான துணி துவைப்பதை முடித்தேன்.
முடித்தேனா? அடுத்து, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து 'குயில் பாட்டு'. அதன் பின், 'கண்ணன் பாட்டு'.
இத்தகையதொரு நாள் புதிதில்லை எனக்கு. ஒரே நாளில் இவ்வளவு படிப்பதுவும் புதிதில்லைதான். வீட்டில் தனியாக இருந்தேன், அதுவும் புதிதில்லை. கல்லூரி நாட்களில் நான் மிகவும் ரசித்தது, அறை நண்பர்களனைவரும் ஊருக்குப் போய் விட்ட நாட்களைத்தான். பெங்களூர் வந்த பிறகு கூட, பெயர் தெரியாத தெருக்களில், பூங்காக்களில், ஏதோ கன்னட நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளில் எனத் தனியாக அலைந்ததுண்டு.
நேற்று இயலவில்லை. 'வார்த்தை தவறி விட்டாய்' படித்ததும், புத்தகத்தை மூடி வைத்தேன். சட்டையை அணிந்து கொண்டேன். வீட்டை விட்டுக் கிளம்பி, தெருக்களில் இலக்கின்றி நடக்கத் தொடங்கினேன். வெறும் 'போர்' அடித்ததுதான் காரணம் என்று நினைத்தேன்.
இல்லை போலிருக்கிறது.
Thursday, February 23, 2006
மறப்போம்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்க்கை முன்னின்று கேட்கும்
என்ன செய்யப் போகிறாய்? - என்று.
இன்னும் கூறும்.
இதுவரை செய்ததெதுவும்
அதற்குப் பொருட்டில்லையாம்.
எதிர்காலம் தருவதென்னவென்ற
பயமும் தேவையில்லையாம்.
பெற்றோரும் மற்றோரும்
உற்றோரும் அற்றோரும்
குறித்துக் கவலை வீணாம்.
பிறந்த இடம், கற்ற மொழி,
செய்த தொழில்,
இன்ன பிற அடையாளங்கள்
கூட்டி வரும் கூட்டம்
இவையொன்றும் புனிதமில்லையாம்.
இந்த நொடி இன்பம்
தருவதெல்லாம் தெய்வமாம்.
அடுத்த நொடி அதற்கும்
அர்த்தமொன்றும் இல்லையாம்.
ஊர் கூடிச் சொல்லி நிற்கும்
ஆயிரமாயிரம் விடயங்கள்
நல்லதென்றும், தீயதென்றும்,
திட்டமென்றும், கொள்கையென்றும்,
ஒன்றென்றும், வேறென்றும்,
உறவென்றும், பகையென்றும்,
நினையென்றும், மறவென்றும்.
அத்தனையும்
ஆனையிட்ட சாணியன்றி
வேறொரு பயனில்லையாம்.
அணைக்க நீண்ட
கரங்களை
அணைத்து மறப்போம்.
தீர்ப்பொன்றும் சொல்லோம்.
அன்பு சிந்திய
விழிகளை
அன்புக்கடல் கொண்டு நிறைத்து
அதையும் மறப்போம்.
ஆயுதம் கொண்டு வரும்
கரம் கண்டால்,
இயன்றால்,
அடித்து ஒடுக்குவோம்.
பயந்தால்,
பதறிப் புடைத்து ஓடுவோம்.
ஆயினும்,
அனைத்தையும் மறப்போம்,
அடுத்த நொடி.
என் வாழ்க்கை முன்னின்று கேட்கும்
என்ன செய்யப் போகிறாய்? - என்று.
இன்னும் கூறும்.
இதுவரை செய்ததெதுவும்
அதற்குப் பொருட்டில்லையாம்.
எதிர்காலம் தருவதென்னவென்ற
பயமும் தேவையில்லையாம்.
பெற்றோரும் மற்றோரும்
உற்றோரும் அற்றோரும்
குறித்துக் கவலை வீணாம்.
பிறந்த இடம், கற்ற மொழி,
செய்த தொழில்,
இன்ன பிற அடையாளங்கள்
கூட்டி வரும் கூட்டம்
இவையொன்றும் புனிதமில்லையாம்.
இந்த நொடி இன்பம்
தருவதெல்லாம் தெய்வமாம்.
அடுத்த நொடி அதற்கும்
அர்த்தமொன்றும் இல்லையாம்.
ஊர் கூடிச் சொல்லி நிற்கும்
ஆயிரமாயிரம் விடயங்கள்
நல்லதென்றும், தீயதென்றும்,
திட்டமென்றும், கொள்கையென்றும்,
ஒன்றென்றும், வேறென்றும்,
உறவென்றும், பகையென்றும்,
நினையென்றும், மறவென்றும்.
அத்தனையும்
ஆனையிட்ட சாணியன்றி
வேறொரு பயனில்லையாம்.
அணைக்க நீண்ட
கரங்களை
அணைத்து மறப்போம்.
தீர்ப்பொன்றும் சொல்லோம்.
அன்பு சிந்திய
விழிகளை
அன்புக்கடல் கொண்டு நிறைத்து
அதையும் மறப்போம்.
ஆயுதம் கொண்டு வரும்
கரம் கண்டால்,
இயன்றால்,
அடித்து ஒடுக்குவோம்.
பயந்தால்,
பதறிப் புடைத்து ஓடுவோம்.
ஆயினும்,
அனைத்தையும் மறப்போம்,
அடுத்த நொடி.
Wednesday, February 22, 2006
பாராட்டு
அடுத்தவர் பாராட்டுக்காக
ஏங்கும் பழக்கம்
எப்போது தோன்றியது என்னில்?
வெளியில் சொல்வது வேறானாலும்,
ஒவ்வோர் அசைவும்
மற்றவர் ஆமோதிப்பை,
வியப்பை, ரசிப்பை
பாராட்டுக்களை
நோக்கி எய்யும் அம்பானது எப்போது?
அதுவும் போக,
எப்போதிருந்து அல்லது ஏன்
இந்த அம்புறாத்தூளி எனக்கு
அலுக்கத் தொடங்கிற்று?
அதன் இல்லாமை கண்டு
யாரேனும் என்னைப்
புகழ்தல் கூடும்
என்று உணர்ந்த கணமாயிருக்குமோ?
அது கிடக்கட்டும்!
ஏன் இந்தக் கவிதை இங்கே?
நீ உணர்ந்ததென்றால்,
அதை எழுதி வைக்க வேண்டிய
அவசியமென்ன?
உன்
ஆராய்ச்சி கண்டேனும்
யாராவது வியக்க வேண்டுமென்றா?
நக்கீரா!
குற்றம் கண்டுபிடித்தது போதும்.
நான் தப்புகிறேன்,
என் மௌனத்துள்.
.
ஏங்கும் பழக்கம்
எப்போது தோன்றியது என்னில்?
வெளியில் சொல்வது வேறானாலும்,
ஒவ்வோர் அசைவும்
மற்றவர் ஆமோதிப்பை,
வியப்பை, ரசிப்பை
பாராட்டுக்களை
நோக்கி எய்யும் அம்பானது எப்போது?
அதுவும் போக,
எப்போதிருந்து அல்லது ஏன்
இந்த அம்புறாத்தூளி எனக்கு
அலுக்கத் தொடங்கிற்று?
அதன் இல்லாமை கண்டு
யாரேனும் என்னைப்
புகழ்தல் கூடும்
என்று உணர்ந்த கணமாயிருக்குமோ?
அது கிடக்கட்டும்!
ஏன் இந்தக் கவிதை இங்கே?
நீ உணர்ந்ததென்றால்,
அதை எழுதி வைக்க வேண்டிய
அவசியமென்ன?
உன்
ஆராய்ச்சி கண்டேனும்
யாராவது வியக்க வேண்டுமென்றா?
நக்கீரா!
குற்றம் கண்டுபிடித்தது போதும்.
நான் தப்புகிறேன்,
என் மௌனத்துள்.
.
Saturday, February 18, 2006
போதும் பயணம்
இன்னுமொரு வைக்கோல்
என் வண்டியில் ஏற்றுங்கள்.
எதற்காகவென்று தெரியாத சுமையுடன்
எங்கென்றும் என்னவென்றும் தெரியாத இலக்கு நோக்கி
ஏனென்று தெரியாமல் அலைந்து திரிவதை விட
அச்சு முறிந்து
சற்றே
இளைப்பாறுகிறேன்.
என் வண்டியில் ஏற்றுங்கள்.
எதற்காகவென்று தெரியாத சுமையுடன்
எங்கென்றும் என்னவென்றும் தெரியாத இலக்கு நோக்கி
ஏனென்று தெரியாமல் அலைந்து திரிவதை விட
அச்சு முறிந்து
சற்றே
இளைப்பாறுகிறேன்.
ஏதாவது எழுத
மீண்டும்
இந்த வலைப்பூவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. முதலில் இட்ட சில பதிவுகளைத் தவிர வேறு ஒன்றும் காணாதிருந்த இதில் மீண்டும் எனது ஈடுபாடு வந்திருக்கிறது. எத்தனை நாள் நீடிக்குமென்று அறியேன்.
சென்ற பதிவு, நீண்ட நாட்களுக்கு முன் இதற்கு முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதியதுதான்.
இப்போதும் 'ஏன் எழுத வேண்டும்' என்ற கேள்விக்குப் பதில் ஒன்றும் கிடைத்து விடவில்லைதான். ஆனால், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்திருக்கிறது.
மூன்று வயதில், எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஆறு வயதில், புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? கேள்விகள் கேட்காமல் எல்லாவற்றையும் செய்தேனே? ஆனால், சிலவற்றை மறைத்துச் செய்ததும் உண்டு. ஏழு வயதில், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் படிப்பது அறிந்தால் அப்பா திட்டுவாரோ என்ற பயத்தால், ஒளிந்து கிடந்து படித்ததுண்டு. அப்பா திட்டுவார் என்ற பயம் ஏன் வந்தது? வேறு எதற்காவது திட்டு வாங்கிய அனுபவமா? அல்லது, இப் புத்தகங்களில் நான் அறிந்து கொள்ளக் கூடாத ஏதோ ஒன்று உள்ளதென்று தோன்றியதன் விளைவா? பதினோரு வயதில், பேருந்தில் மாணவிகள் உள்ள இடத்தில் சென்று நிற்க வேண்டுமென்று ஏன் தோன்றியது? ஆனால் அப்படி நிற்கக் கூடாது என்றொரு எண்ணமும் ஏன் உடனே தோன்றியது? இந்த இரண்டையும் கவனித்த மனதில் வியப்பொன்று ஏன் தோன்றியது?
இப்படி வாழ்வில் செய்த, செய்யாத பல காரியங்களுக்கு ஏன் என்று கேள்வி கேட்டதேயில்லை. கேட்டிருந்தால், இன்னும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்திருப்பேனோ என்னவோ? ஆனால், அப்படி நின்று விட்டால்தான் என்னவாம்? நில்லாமல் ஓடி வந்ததில் கண்டதுதான் என்ன?
ஆக, ஏனென்று கேட்டதில் தவறில்லை. கேளாதிருந்ததிலும் தவறில்லை. இப்போது எழுதினாலும் தவறில்லை. அதைச் சுய விளம்பரத்துக்காக எழுதினாலும் தவறில்லை; (மயில் ஆடுவது சுய விளம்பரமில்லாமல் என்ன? செடி பூப்பது சுய விளம்பரமில்லாமல் என்ன?) சுய திருப்திக்காக எழுதினாலும் தவறில்லை; அல்லது சும்மா எழுதினாலும் தவறில்லை. எழுதாமலிருந்தாலும் தவறில்லை.
இந்த வலைப்பூவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. முதலில் இட்ட சில பதிவுகளைத் தவிர வேறு ஒன்றும் காணாதிருந்த இதில் மீண்டும் எனது ஈடுபாடு வந்திருக்கிறது. எத்தனை நாள் நீடிக்குமென்று அறியேன்.
சென்ற பதிவு, நீண்ட நாட்களுக்கு முன் இதற்கு முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதியதுதான்.
இப்போதும் 'ஏன் எழுத வேண்டும்' என்ற கேள்விக்குப் பதில் ஒன்றும் கிடைத்து விடவில்லைதான். ஆனால், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்திருக்கிறது.
மூன்று வயதில், எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஆறு வயதில், புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? கேள்விகள் கேட்காமல் எல்லாவற்றையும் செய்தேனே? ஆனால், சிலவற்றை மறைத்துச் செய்ததும் உண்டு. ஏழு வயதில், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் படிப்பது அறிந்தால் அப்பா திட்டுவாரோ என்ற பயத்தால், ஒளிந்து கிடந்து படித்ததுண்டு. அப்பா திட்டுவார் என்ற பயம் ஏன் வந்தது? வேறு எதற்காவது திட்டு வாங்கிய அனுபவமா? அல்லது, இப் புத்தகங்களில் நான் அறிந்து கொள்ளக் கூடாத ஏதோ ஒன்று உள்ளதென்று தோன்றியதன் விளைவா? பதினோரு வயதில், பேருந்தில் மாணவிகள் உள்ள இடத்தில் சென்று நிற்க வேண்டுமென்று ஏன் தோன்றியது? ஆனால் அப்படி நிற்கக் கூடாது என்றொரு எண்ணமும் ஏன் உடனே தோன்றியது? இந்த இரண்டையும் கவனித்த மனதில் வியப்பொன்று ஏன் தோன்றியது?
இப்படி வாழ்வில் செய்த, செய்யாத பல காரியங்களுக்கு ஏன் என்று கேள்வி கேட்டதேயில்லை. கேட்டிருந்தால், இன்னும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்திருப்பேனோ என்னவோ? ஆனால், அப்படி நின்று விட்டால்தான் என்னவாம்? நில்லாமல் ஓடி வந்ததில் கண்டதுதான் என்ன?
ஆக, ஏனென்று கேட்டதில் தவறில்லை. கேளாதிருந்ததிலும் தவறில்லை. இப்போது எழுதினாலும் தவறில்லை. அதைச் சுய விளம்பரத்துக்காக எழுதினாலும் தவறில்லை; (மயில் ஆடுவது சுய விளம்பரமில்லாமல் என்ன? செடி பூப்பது சுய விளம்பரமில்லாமல் என்ன?) சுய திருப்திக்காக எழுதினாலும் தவறில்லை; அல்லது சும்மா எழுதினாலும் தவறில்லை. எழுதாமலிருந்தாலும் தவறில்லை.
ஏன் எழுத? - 2
ஏன் எழுத வேண்டும்? - 2
சும்மா, ஒரு திருப்திக்காக, ஆத்ம திருப்தி என்று பெயர் செய்து கொண்டு, தனது பெயரைப் பிறர் உச்சரிப்பதில் இன்பங் காணுபவனாக, தன்னைப் பிறருக்கு அடையாளம் தெரிவதில் மகிழ்பவனாக எழுதுபவர்களும் உண்டு. அதாவது ஈகோவுக்கு உணவிடுவதற்காக. அது தவறா என்ற வாதத்திற்கு நான் செல்லவில்லை. நான் அதைச் செய்யப் போகிறேனா என்று எனக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதான். ஒருவேளை நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேனோ, என்னவோ? மனித மனம்தான் எவ்வளவு விசித்திரமானது! எனக்கு இன்னும் தெரியவில்லை.
என் மனத்தினுள்ளும் இப்படி ஓர் ஆசை உள்ளூர இருப்பதை நான் அவ்வப்போது அறிய நேர்ந்திருக்கிறது. ஒன்றும் இல்லாமலா வீசியெறியக் கூடிய காகிதத்தில் எழுதாமல், உலகம் முழுதும் காண வாய்ப்பிருக்கும் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை? என்றாலும், ஏதாவது எழுதி, பெயர் வாங்கி விட வேண்டும் என்பதை விட, எழுத்து என்பதன் வலிமையையும், பொறுப்பையும் ஒருங்கே உணர்ந்து, ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியுமா என்று முயல்வதுதான் எனது எண்ணமாக இருக்கிறது. உருப்படியாக யாருக்குச் செய்ய எண்ணம்? உண்மையில் எனக்குத்தான். எனக்குத்தானெனில் இதில் எழுத்தின் வலிமையும், பொறுப்பும் எங்கிருந்து வந்தன? அதை விட, எனது தேவைகளும், குறிக்கோள்களுமல்லவா முக்கியமாக இருக்கும்! உண்மைதான். ஓரளவு நெருங்கி வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லையென்று தோன்றுகிறது. என்னுடைய டைரியில் எழுதிக்கொள்ளலாமே! அல்லது கணினியில் ஆனாலும் எனக்கே எனக்கென்று ஒரு file-ல் வைத்துக் கொள்ளலாமே! ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? ஏன்?
ஒவ்வொருவரும், தனக்கென்று செய்து கொள்வது, தன்னை மட்டும் மனதில் வைத்து அல்ல. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று என் எண்ணங்கள் மூலம் முடிவு செய்கிறேனோ, அதையே நான் எனக்குச் செய்து கொள்கிறேன். உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லையென்றாலும், இந்த உலகத்தில் நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்றுதான் சிந்திக்கிறேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும், எல்லா வகைகளிலும் சிறந்த உலகத்தில் வாழவே விரும்புகிறோம். அந்த 'சிறந்த உலகம்' என்பதற்கான definition ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. என் சிறந்த உலகம் என்பது அடுக்கு மாடிக் குடியிருப்பும், அனைத்து வசதிகளும் கைக்கெட்டும் தூரத்திலும் என்பதாக இருந்தால், நான் அத்தகையதொரு இடத்தில் சென்று என்னை வைத்துக் கொள்கிறேன். அதுவன்றி, சுற்றிலும் வயல் சூழ்ந்த ஒரு குடிசையே சிறப்பு என்று தோன்றினால், நான் அங்கு செல்ல விரும்புகிறேன். எளிமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நான் கருதினால் மட்டுமே, எளிமையாக இருக்க முயல்கிறேன். நான் இந்த உலகத்துடன் என்னைப் பொருத்திப் பார்த்தே நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறேன். இதற்குக் காரணம் ஒருவன் தனித்துச் செயல்பட இயலாதவனாக இருப்பதல்ல. அவ்வாறு தனித்துச் செயல்படுவது அவனது இயல்பு அல்ல. அல்லது அவ்வாறு அவன் படைக்கப் படவில்லை.
இது சரிதானா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். இன்னும் பார்ப்போம். உலகில் பெரும்பான்மையோர், பிறந்து, வளர்ந்து ஒரு நல்ல வருமானம் தரும் வேலையைத் தேடிக் கொண்டு, மனைவி மக்கள் என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அதற்குக் காரணம், அதைத்தான் உலகம் இயல்பான வாழ்க்கை முறையாக அங்கீகரித்திருக்கிறது. சிலர், ஏதாவது செயற்கரிய செய்து, புகழ் பெற முயல்கின்றனர். காரணம், அதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். சிலர், உலகம் போகும் போக்கு குறித்துக் கவலை கொண்டவராக அதை மாற்றும், அல்லது சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம், அவர்களது உலகத்துக்கும் தமக்குமிடையேயான உறவைக் குறித்த எண்ணமும், அதன் மேலான அக்கறையும். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பெரும்பான்மை என்றால், உலகம் என்ன சொன்னால் என்ன என்பவர்களும், அதே உலகத்தைக் கவர்வதற்கான அல்லது அலட்சியப்படுத்துவதற்கான முயற்சியையே செய்கிறார்கள். ஆக, ஒருவன் தனித்தவனாக எந்த முடிவும் எடுப்பதாகத் தோன்றவில்லை. உலகம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்தே அவனது முடிவுகளும் அமைகின்றன.
இந்த வட்டத்தின் வெளியே வசிப்பவர்கள் யாரேனும் உண்டா? உண்டு. மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விட்டு விடுவோம். ஞானிகள் என்று யாரேனும் சொல்லக் கூடும். உலகத்தால் ஞானிகள் என்று அழைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் சில இலக்கணத்துக்குட்பட்டாக வேண்டும். உலகம் வகுத்த இலக்கணங்கள் எவையும் உலகத்தின் வெளியே இருப்பவையல்ல. இருந்தாலும், சிலர் உலகம் குறித்த எந்தக் கவலையுமின்றி, அக்கறையுமின்றி, பயமுமின்றி இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனினும் அந்த சிறுபான்மையை விட்டு விடுவோம். (அந்த நிலையை அடைவதற்குச் சில முயற்சிகள் தேவையெனில், அவர்களை அந்த முயற்சி எடுக்கத் தூண்டியதற்கு உலகமே காரணமாக அமைந்திருக்கலாம் அல்லவா!)
-தொடரும்
சும்மா, ஒரு திருப்திக்காக, ஆத்ம திருப்தி என்று பெயர் செய்து கொண்டு, தனது பெயரைப் பிறர் உச்சரிப்பதில் இன்பங் காணுபவனாக, தன்னைப் பிறருக்கு அடையாளம் தெரிவதில் மகிழ்பவனாக எழுதுபவர்களும் உண்டு. அதாவது ஈகோவுக்கு உணவிடுவதற்காக. அது தவறா என்ற வாதத்திற்கு நான் செல்லவில்லை. நான் அதைச் செய்யப் போகிறேனா என்று எனக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதான். ஒருவேளை நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேனோ, என்னவோ? மனித மனம்தான் எவ்வளவு விசித்திரமானது! எனக்கு இன்னும் தெரியவில்லை.
என் மனத்தினுள்ளும் இப்படி ஓர் ஆசை உள்ளூர இருப்பதை நான் அவ்வப்போது அறிய நேர்ந்திருக்கிறது. ஒன்றும் இல்லாமலா வீசியெறியக் கூடிய காகிதத்தில் எழுதாமல், உலகம் முழுதும் காண வாய்ப்பிருக்கும் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை? என்றாலும், ஏதாவது எழுதி, பெயர் வாங்கி விட வேண்டும் என்பதை விட, எழுத்து என்பதன் வலிமையையும், பொறுப்பையும் ஒருங்கே உணர்ந்து, ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியுமா என்று முயல்வதுதான் எனது எண்ணமாக இருக்கிறது. உருப்படியாக யாருக்குச் செய்ய எண்ணம்? உண்மையில் எனக்குத்தான். எனக்குத்தானெனில் இதில் எழுத்தின் வலிமையும், பொறுப்பும் எங்கிருந்து வந்தன? அதை விட, எனது தேவைகளும், குறிக்கோள்களுமல்லவா முக்கியமாக இருக்கும்! உண்மைதான். ஓரளவு நெருங்கி வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லையென்று தோன்றுகிறது. என்னுடைய டைரியில் எழுதிக்கொள்ளலாமே! அல்லது கணினியில் ஆனாலும் எனக்கே எனக்கென்று ஒரு file-ல் வைத்துக் கொள்ளலாமே! ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? ஏன்?
ஒவ்வொருவரும், தனக்கென்று செய்து கொள்வது, தன்னை மட்டும் மனதில் வைத்து அல்ல. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று என் எண்ணங்கள் மூலம் முடிவு செய்கிறேனோ, அதையே நான் எனக்குச் செய்து கொள்கிறேன். உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லையென்றாலும், இந்த உலகத்தில் நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்றுதான் சிந்திக்கிறேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும், எல்லா வகைகளிலும் சிறந்த உலகத்தில் வாழவே விரும்புகிறோம். அந்த 'சிறந்த உலகம்' என்பதற்கான definition ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. என் சிறந்த உலகம் என்பது அடுக்கு மாடிக் குடியிருப்பும், அனைத்து வசதிகளும் கைக்கெட்டும் தூரத்திலும் என்பதாக இருந்தால், நான் அத்தகையதொரு இடத்தில் சென்று என்னை வைத்துக் கொள்கிறேன். அதுவன்றி, சுற்றிலும் வயல் சூழ்ந்த ஒரு குடிசையே சிறப்பு என்று தோன்றினால், நான் அங்கு செல்ல விரும்புகிறேன். எளிமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நான் கருதினால் மட்டுமே, எளிமையாக இருக்க முயல்கிறேன். நான் இந்த உலகத்துடன் என்னைப் பொருத்திப் பார்த்தே நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறேன். இதற்குக் காரணம் ஒருவன் தனித்துச் செயல்பட இயலாதவனாக இருப்பதல்ல. அவ்வாறு தனித்துச் செயல்படுவது அவனது இயல்பு அல்ல. அல்லது அவ்வாறு அவன் படைக்கப் படவில்லை.
இது சரிதானா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். இன்னும் பார்ப்போம். உலகில் பெரும்பான்மையோர், பிறந்து, வளர்ந்து ஒரு நல்ல வருமானம் தரும் வேலையைத் தேடிக் கொண்டு, மனைவி மக்கள் என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அதற்குக் காரணம், அதைத்தான் உலகம் இயல்பான வாழ்க்கை முறையாக அங்கீகரித்திருக்கிறது. சிலர், ஏதாவது செயற்கரிய செய்து, புகழ் பெற முயல்கின்றனர். காரணம், அதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். சிலர், உலகம் போகும் போக்கு குறித்துக் கவலை கொண்டவராக அதை மாற்றும், அல்லது சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம், அவர்களது உலகத்துக்கும் தமக்குமிடையேயான உறவைக் குறித்த எண்ணமும், அதன் மேலான அக்கறையும். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பெரும்பான்மை என்றால், உலகம் என்ன சொன்னால் என்ன என்பவர்களும், அதே உலகத்தைக் கவர்வதற்கான அல்லது அலட்சியப்படுத்துவதற்கான முயற்சியையே செய்கிறார்கள். ஆக, ஒருவன் தனித்தவனாக எந்த முடிவும் எடுப்பதாகத் தோன்றவில்லை. உலகம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்தே அவனது முடிவுகளும் அமைகின்றன.
இந்த வட்டத்தின் வெளியே வசிப்பவர்கள் யாரேனும் உண்டா? உண்டு. மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விட்டு விடுவோம். ஞானிகள் என்று யாரேனும் சொல்லக் கூடும். உலகத்தால் ஞானிகள் என்று அழைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் சில இலக்கணத்துக்குட்பட்டாக வேண்டும். உலகம் வகுத்த இலக்கணங்கள் எவையும் உலகத்தின் வெளியே இருப்பவையல்ல. இருந்தாலும், சிலர் உலகம் குறித்த எந்தக் கவலையுமின்றி, அக்கறையுமின்றி, பயமுமின்றி இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனினும் அந்த சிறுபான்மையை விட்டு விடுவோம். (அந்த நிலையை அடைவதற்குச் சில முயற்சிகள் தேவையெனில், அவர்களை அந்த முயற்சி எடுக்கத் தூண்டியதற்கு உலகமே காரணமாக அமைந்திருக்கலாம் அல்லவா!)
-தொடரும்
Monday, March 15, 2004
ஏன் எழுத?
ஏன் எழுத வேண்டும்?
'ஏன் எழுத வேண்டும்?' என்ற கேள்வி எனக்கு மிகவும் பெரியதாகத் தோற்றமளிக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே, எழுதுவது, பேசுவது போன்ற காரியங்களுக்கு உண்டான காரணங்களைத் தேடுவதிலேயே, அவற்றைச் செய்வதற்கான வாய்ப்புகள் பலவற்றை இழந்திருக்கிறேன். அவை குறித்து வருத்தமொன்றுமில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை. நேற்று வரை பெரிய விஷயமாக எண்ணிக் கொண்டிருந்த ஒன்றை இன்று நான் முற்றிலுமாக அலட்சியம் செய்யுமளவு எண்ணங்கள் மாறுகின்றன. அதிகமாகப் படிப்பவர்களுக்கு இது இன்னும் அதிகமாக இருக்குமென்றே நம்புகிறேன். குழப்பம் மிக்கவர்களுக்குத்தான், தெளிவு இல்லாதவர்களுக்குத்தான் இது நிகழும் என்றும், மன உறுதியும், தெளிவும் உள்ளவர்க்கு இது போன்ற நிலை ஏற்படத் தேவையில்லை என்றும் கூறலாம். அவர்களுக்கு ஒருவேளை, இது அடிக்கடி நிகழாமல் போகலாம். ஆனால், கருத்துக்களில் மாற்றம் கட்டாயம் ஏதாவதொரு கட்டத்தில் நிகழும் ஒன்று என்பது எனது எண்ணம்.
இப்படியிருக்க, இன்று நான் (உலகமே தவறென்று மறுத்தாலும்) சரியென்று கருதுவன, நாளை என்னாலேயே நிராகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் நிறைந்த சூழலில், நான் ஏன் எழுதி மற்றவர்களது எண்ணங்களை ஆக்கிரமிக்க முயல வேண்டும்? அல்லது, நான் ஆக்கிரமிப்புக்காகவன்று, அங்கீகாரத்துக்காக மட்டுமே எழுதுகிறேன் என்பேனாகில், எனது அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதே ஐயத்துக்குரியதானபோது, பிறரது அங்கீகாரம் பெற்றுத்தான் என்ன பயன்?
இங்கு ஒரு விஷயம். இவையெல்லாம், நான் காலையில் என்ன சாப்பிட்டேன்; என்ன நிறத்தில் உடுத்தினேன்; எந்த நண்பருடன் அல்லது நண்பியுடன் குடித்தேன் என்றெல்லாம் எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகளே அல்ல. பொழுதுபோக்குக்காக, நண்பர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ளுவதற்காக, அயல்நாட்டிலிருந்து கொண்டு தமிழுடனான, தமிழருடனான உறவை வலுப்படுத்தும் விஷயமாக எழுதும்போது இவையும் அவரவரைப் பொறுத்த மட்டில் மிகவும் பயனுடையவையே. இவற்றில் மிகப்பல சுவாரசியமானவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே. சிலர் இவற்றினூடே, தங்களது உயர்ந்த கருத்துக்களையும், அல்லது நல்ல சிந்தனைகளுக்கு வித்திடுகின்ற விஷயங்களையும் எழுதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.
எனக்கு அவ்வாறு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சரி, அப்படி எதைத்தான் எழுதப் போகிறேன் என்றால், அதையும் இன்னும் முடிவு செய்யவில்லை. அதுதான் ஏன் எழுத வேண்டுமென்ற கேள்வியில் நிற்கிறேனே? மறுபடியும் அந்தக் கேள்விக்குப் போவோம்.
இப்போது எனது அறிவுக்கு எட்டிய விஷயங்கள் இரண்டு.
1. உலகத்தைத் திருத்த வேண்டுமென்று எழுத வேண்டியதில்லை. ஏனெனில், எனது கருத்து தவறென்று நாளை எனக்கு உதயமாகலாம்.
2. அங்கீகாரத்திற்காக எழுத வேண்டிய அவசியமுமில்லை. அதே காரணம்.
கண்டு பிடிப்போம்...
'ஏன் எழுத வேண்டும்?' என்ற கேள்வி எனக்கு மிகவும் பெரியதாகத் தோற்றமளிக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே, எழுதுவது, பேசுவது போன்ற காரியங்களுக்கு உண்டான காரணங்களைத் தேடுவதிலேயே, அவற்றைச் செய்வதற்கான வாய்ப்புகள் பலவற்றை இழந்திருக்கிறேன். அவை குறித்து வருத்தமொன்றுமில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை. நேற்று வரை பெரிய விஷயமாக எண்ணிக் கொண்டிருந்த ஒன்றை இன்று நான் முற்றிலுமாக அலட்சியம் செய்யுமளவு எண்ணங்கள் மாறுகின்றன. அதிகமாகப் படிப்பவர்களுக்கு இது இன்னும் அதிகமாக இருக்குமென்றே நம்புகிறேன். குழப்பம் மிக்கவர்களுக்குத்தான், தெளிவு இல்லாதவர்களுக்குத்தான் இது நிகழும் என்றும், மன உறுதியும், தெளிவும் உள்ளவர்க்கு இது போன்ற நிலை ஏற்படத் தேவையில்லை என்றும் கூறலாம். அவர்களுக்கு ஒருவேளை, இது அடிக்கடி நிகழாமல் போகலாம். ஆனால், கருத்துக்களில் மாற்றம் கட்டாயம் ஏதாவதொரு கட்டத்தில் நிகழும் ஒன்று என்பது எனது எண்ணம்.
இப்படியிருக்க, இன்று நான் (உலகமே தவறென்று மறுத்தாலும்) சரியென்று கருதுவன, நாளை என்னாலேயே நிராகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் நிறைந்த சூழலில், நான் ஏன் எழுதி மற்றவர்களது எண்ணங்களை ஆக்கிரமிக்க முயல வேண்டும்? அல்லது, நான் ஆக்கிரமிப்புக்காகவன்று, அங்கீகாரத்துக்காக மட்டுமே எழுதுகிறேன் என்பேனாகில், எனது அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதே ஐயத்துக்குரியதானபோது, பிறரது அங்கீகாரம் பெற்றுத்தான் என்ன பயன்?
இங்கு ஒரு விஷயம். இவையெல்லாம், நான் காலையில் என்ன சாப்பிட்டேன்; என்ன நிறத்தில் உடுத்தினேன்; எந்த நண்பருடன் அல்லது நண்பியுடன் குடித்தேன் என்றெல்லாம் எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகளே அல்ல. பொழுதுபோக்குக்காக, நண்பர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ளுவதற்காக, அயல்நாட்டிலிருந்து கொண்டு தமிழுடனான, தமிழருடனான உறவை வலுப்படுத்தும் விஷயமாக எழுதும்போது இவையும் அவரவரைப் பொறுத்த மட்டில் மிகவும் பயனுடையவையே. இவற்றில் மிகப்பல சுவாரசியமானவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே. சிலர் இவற்றினூடே, தங்களது உயர்ந்த கருத்துக்களையும், அல்லது நல்ல சிந்தனைகளுக்கு வித்திடுகின்ற விஷயங்களையும் எழுதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.
எனக்கு அவ்வாறு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சரி, அப்படி எதைத்தான் எழுதப் போகிறேன் என்றால், அதையும் இன்னும் முடிவு செய்யவில்லை. அதுதான் ஏன் எழுத வேண்டுமென்ற கேள்வியில் நிற்கிறேனே? மறுபடியும் அந்தக் கேள்விக்குப் போவோம்.
இப்போது எனது அறிவுக்கு எட்டிய விஷயங்கள் இரண்டு.
1. உலகத்தைத் திருத்த வேண்டுமென்று எழுத வேண்டியதில்லை. ஏனெனில், எனது கருத்து தவறென்று நாளை எனக்கு உதயமாகலாம்.
2. அங்கீகாரத்திற்காக எழுத வேண்டிய அவசியமுமில்லை. அதே காரணம்.
கண்டு பிடிப்போம்...
முன்னுரை மீண்டும்
இந்த வலைப்பூ ஆரம்பித்த விவரத்தை இன்னும் நண்பர்களிடம் சொல்லவில்லை. காரணங்கள் உள. இன்னும் எத்தனை நாட்கள் தொடர்ந்து இதில் எழுதுவேன் என்று தெரியாத நிலை. அப்புறம், வாசிப்பவர்களின் கருத்துக்களை உள்ளிடுவதற்கான வழிமுறைகளை எல்லாம் செய்து விட்டு அப்புறம் அறிவித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். இதை நிறைவேற்ற வேலைகள் எதுவும் இல்லாத ஒரு வார இறுதி கிட்ட வேண்டும். விரைவில் நிகழும் என்று நம்புகிறேன்.
Saturday, March 13, 2004
என்ன எழுத?
ஆக நானும் வலைப்பூ ஒன்றை என் பெயரில் தொடங்கிக் கொண்டு விட்டேன். இனி, இதில் என்ன எழுதுவது? இந்தக் கேள்விக்குப் பதிலை மிகவும் சீரியஸாக யோசிக்கத் தொடங்கியதால்தான், சென்ற முறை இதைத் தொடராமல் விட்டு விட்டேன்.
இன்று வலைப்பூக்களில் உலவிக் கொண்டிருந்தபோது, அவற்றின் உள்ளடக்கம் குறித்த விவாதம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். அதை அடிப்படையாக வைத்துக்கொள்ளுமளவு உள்ளடக்கம் இன்னும் என்னிடம் இல்லை. எனவே எழுதத் தொடங்குவோம். அதன்பின் தானாக ஒரு வரையறை ஏற்பட்டு விடும் என்று எண்ணுகிறேன்.
ஆக, என்ன எழுதுவது என்ற கேள்வியைத் தந்திரமாக ஒத்திப் போட்டாயிற்று. இதனினும் பெரிய கேள்வி ஒன்று என்னை அடிக்கடி உறுத்துவதுண்டு. அது, 'ஏன் எழுத வேண்டும்' என்பது. நான் எழுதுவது எல்லாம் சுய தம்பட்டமாக ('டப்பா' அடிப்பதாக) முடிந்து விடுகிறதோ என்று ஒரு பயமும் உண்டு. ('இவன் என்ன நிறைய எழுதியதைப் போலப் பேசுகிறானே' என்றெண்ண வேண்டாம். யாருக்கும் தெரியாமல் நிறைய எழுதியிருக்கிறேனாக்கும்) அதையும் மீறி, ஒரு ஒழுங்கான சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்து, எழுதுவதற்காகவென்றே சிந்தனை செய்ய வேண்டிய நிலை வருவதையும் எண்ணி அருவருப்புடன் பயப்பட வேண்டியிருக்கிறது. அது போக, எழுதுவது பொழுதுபோக்கு என்றொரு நிலையும் வராதிருக்க வேண்டும். முனிவர் வீட்டில் பூனை, பசு, வேலைக்காரி, மனைவி, குழந்தை என்று சேர்ந்ததொரு கதையைப் போல, இந்த வலைப்பூ, அதன் பராமரிப்பு எல்லாம் தொல்லையாகி விடுமோ அல்லது மயக்கம் தரும் விஷயமாகி விடுமோ என்றொரு தயக்கமும் உண்டு.
எனவே நான் எழுதுவது பொழுதுபோக்கன்று; எழுத வேண்டும் என்பதற்காகவுமன்று; எதையோ தேடுவதான பயணத்தில், இளைப்பாறும் வசதி கிடைக்கும் நேரத்தில் அசை போடுவதற்காகவும், மேலும் உள் நோக்கியதான பயணத்திற்கு உதவி புரியும் முகமாகவும் மட்டுமே.
தேடப்படும் பொருள் என்னவென்று ஏற்கனவே சொல்லி விட்டேன். அதை மீண்டும் மீண்டும் சொல்லி அந்த வார்த்தைக்கான முக்கியத்துவத்தைக் கூட்ட விரும்பவில்லை. வார்த்தைகளை அவற்றிற்குரிய இடத்தில் வைப்போம். அதையும் தாண்டியதே எனது தேடல்.
இன்று வலைப்பூக்களில் உலவிக் கொண்டிருந்தபோது, அவற்றின் உள்ளடக்கம் குறித்த விவாதம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். அதை அடிப்படையாக வைத்துக்கொள்ளுமளவு உள்ளடக்கம் இன்னும் என்னிடம் இல்லை. எனவே எழுதத் தொடங்குவோம். அதன்பின் தானாக ஒரு வரையறை ஏற்பட்டு விடும் என்று எண்ணுகிறேன்.
ஆக, என்ன எழுதுவது என்ற கேள்வியைத் தந்திரமாக ஒத்திப் போட்டாயிற்று. இதனினும் பெரிய கேள்வி ஒன்று என்னை அடிக்கடி உறுத்துவதுண்டு. அது, 'ஏன் எழுத வேண்டும்' என்பது. நான் எழுதுவது எல்லாம் சுய தம்பட்டமாக ('டப்பா' அடிப்பதாக) முடிந்து விடுகிறதோ என்று ஒரு பயமும் உண்டு. ('இவன் என்ன நிறைய எழுதியதைப் போலப் பேசுகிறானே' என்றெண்ண வேண்டாம். யாருக்கும் தெரியாமல் நிறைய எழுதியிருக்கிறேனாக்கும்) அதையும் மீறி, ஒரு ஒழுங்கான சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்து, எழுதுவதற்காகவென்றே சிந்தனை செய்ய வேண்டிய நிலை வருவதையும் எண்ணி அருவருப்புடன் பயப்பட வேண்டியிருக்கிறது. அது போக, எழுதுவது பொழுதுபோக்கு என்றொரு நிலையும் வராதிருக்க வேண்டும். முனிவர் வீட்டில் பூனை, பசு, வேலைக்காரி, மனைவி, குழந்தை என்று சேர்ந்ததொரு கதையைப் போல, இந்த வலைப்பூ, அதன் பராமரிப்பு எல்லாம் தொல்லையாகி விடுமோ அல்லது மயக்கம் தரும் விஷயமாகி விடுமோ என்றொரு தயக்கமும் உண்டு.
எனவே நான் எழுதுவது பொழுதுபோக்கன்று; எழுத வேண்டும் என்பதற்காகவுமன்று; எதையோ தேடுவதான பயணத்தில், இளைப்பாறும் வசதி கிடைக்கும் நேரத்தில் அசை போடுவதற்காகவும், மேலும் உள் நோக்கியதான பயணத்திற்கு உதவி புரியும் முகமாகவும் மட்டுமே.
தேடப்படும் பொருள் என்னவென்று ஏற்கனவே சொல்லி விட்டேன். அதை மீண்டும் மீண்டும் சொல்லி அந்த வார்த்தைக்கான முக்கியத்துவத்தைக் கூட்ட விரும்பவில்லை. வார்த்தைகளை அவற்றிற்குரிய இடத்தில் வைப்போம். அதையும் தாண்டியதே எனது தேடல்.
முன்னுரை
நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு முறை, வலைப்பூ ஒன்றைத் தொடங்க முயன்றிருந்தேன். அதாவது, ஐந்து மாதங்களுக்கு முன்பு. இப்போது மீண்டும், ஆசை தூண்ட, மறுபடியும் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணமுண்டு.
இதற்குப் பெயர் என்ன வைப்பது என்று யோசிக்கும்போது, தெளிவு என்ற பெயர் மனதில் தோன்றிற்று. அதன் பின் யோசிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன்.
இதற்குப் பெயர் என்ன வைப்பது என்று யோசிக்கும்போது, தெளிவு என்ற பெயர் மனதில் தோன்றிற்று. அதன் பின் யோசிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)